செய்திகள் மலேசியா
சுங்கைப்பூலோவில் 16 பள்ளிகள், 551 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
சுங்கைப்பூலோ:
சுங்கைப்பூலோவில் 16 பள்ளிகள், 551 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.
அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
பேங்க் ரக்யாட் அறவாரியத்தின் கீழ் சுங்கைப்பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் இக்கல்வி உதவிகள் வழங்கப்பட்டது.
அவ்வகையில் பாயா ஜெராஸில் வட்டாரத்தில் உள்ள 16 பள்ளிகள், 551 பள்ளி, உயர் கல்வி மாணவர்களுக்கு இன்று உதவி நிதிகள் வழங்கப்பட்டது.
7 இடை நிலைப்பள்ளிகளுக்கு டியூசன் கட்டணமாக 70 ஆயிரம் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டது.
8 ஆரம்பப் பள்ளிகளுக்கு 40ஆயிரம் ரிங்கிட் உதவி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
500 பள்ளி மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட் கல்வி உதவி நிதியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதே வேளையில் 51 உயர் கல்வி மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கப்பட்டது.
சுங்கைப்பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மாணவர்கள் கல்வி சிறந்து விளங்க வேண்டும்.
இதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் இந்த உதவி தொகைகள் வழங்கப்பட்டது.
நிதியை பெற்ற பள்ளிகள் அதனை முறையாக பயன்படுத்த வேண்டும். அதே வேளையில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2024, 6:29 pm
தீபாவளி உணவுக் கூடைகளுக்கான ஒடுக்கீட்டை பிரதமர் அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 5, 2024, 6:28 pm
ஷாஆலம் தாமான் ஶ்ரீ மூடாவில் அதிரடி சோதனை; 602 அந்நிய நாட்டினர் கைது: அமிரூடின் ஷாரி
October 5, 2024, 6:26 pm