நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலிஸ் அதிகாரி கைது: சைபுடின்

புத்ராஜெயா:

ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி சரவாக் சாங் எனும் இடத்தில் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்படார்.

இது தொடர்பான விசாரணையில் உதவியாக தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு போலிஸ்காரரும் அடங்குவார்.

சரவாக் போலிஸ்படைத் தலைவர் டத்தோ மஞ்சா அட்டா சமீபத்தில் நான் சரவாக் சென்றிருந்தபோது, ​​இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் ராணுவப் பயிற்சிப் பகுதியில் நடந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணை குறித்து விளக்கமளித்தார்.

போலிஸ் புகார் அளித்த பிறகு, சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிய போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர் என்று டத்தோஶ்ரீ சைபுடின் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset