செய்திகள் மலேசியா
சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதியை மீண்டும் தற்காத்தது தேசியக் கூட்டணி
நிபோங் திபால்:
சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதியை தேசியக் கூட்டணி மீண்டும் தற்காத்துக் கொண்டுள்ளது.
பினாங்கு மாநிலத்தில் சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத் தேர்தல் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் ஜொஹாரி அரிபினும் தேசியக் கூட்டணி சார்பில் அபிடினும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் இத்தேர்தலில் தேசியக் கூட்டணி வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் 14,074 வாக்குகளை பெற்றார்.
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஜொஹாரி அரிபின் 9,941 வாக்குகளை பெற்றார்.
கிட்டத்தட்ட 4,133 வாக்குகள் பெரும்பான்மையில் தேசியக் கூட்டணி வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் தேசியக் கூட்டணி சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக் கொண்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2024, 6:29 pm
தீபாவளி உணவுக் கூடைகளுக்கான ஒடுக்கீட்டை பிரதமர் அதிகரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
October 5, 2024, 6:28 pm
ஷாஆலம் தாமான் ஶ்ரீ மூடாவில் அதிரடி சோதனை; 602 அந்நிய நாட்டினர் கைது: அமிரூடின் ஷாரி
October 5, 2024, 6:26 pm
ராணுவ வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலிஸ் அதிகாரி கைது: சைபுடின்
October 5, 2024, 6:25 pm