செய்திகள் மலேசியா
வெளிநாடுகளில் இருந்து வருவோர் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு அனுமதி
கோலாலம்பூர்:
இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து மலேசியா வந்தடைந்த பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தங்கள் வீடு அல்லது வசிப்பிடத்தில் தனிமைப்படுத்தலில் இருப்பது வசதியாகவும் sopக்களை பின்பற்றும் வகையில் இருப்பதாகவும் கருதும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஏற்பாட்டை பின்பற்றலாம் என அந்த அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஏற்பாட்டை பயன்படுத்திக் கொள்வோர், ‘பிசிஆர்’ பரிசோதனையில் ‘தொற்று இல்லை’ எனச் சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள விரும்பினால் இணையம் வழி பெயரைப் பதிவு செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு, மலேசியாவிற்குள் நுழைவதற்கு ஏழு முதல் பத்து நாள்களுக்கு முன்பே விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.
இதுபோன்ற விண்ணப்பங்கள் நூற்றுக்கணக்கில் குவிந்து வரும் நிலையில், தற்போது ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது என்கிறார் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2024, 4:44 pm
உலகில் மிகவும் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்களின் பட்டியலில் பிரதமர் அன்வார் 15ஆவது இடத்தில் உள்ளார்
October 8, 2024, 4:08 pm
தஞ்சோங் ரம்புத்தான் வடபகுதி ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு 15 ஆயிரம் ரிங்கிட் நிதி
October 8, 2024, 4:07 pm
விமான நிலையத்தில் இருக்கைகளை அபகரித்ததற்காக அடிதடி: எழுவர் கைது
October 8, 2024, 4:05 pm
நிதி அதிகாரி உட்பட குளோபல் இக்வான் தொடர்புடைய 3 பேரின் தடுப்புக் காவல் நீட்டிப்பு
October 8, 2024, 4:04 pm
கேமரன்மலையில் கடை வாடகை 7,500 ரிங்கிட் வரை உயர்வு: விசாரணைகள் நடத்தப்படும்: மாநில அரசு
October 8, 2024, 3:10 pm
ஜொகூர் வாரயிறுதி விடுமுறை மாற்றம் முதலீடு, வர்த்தகம் மேம்பட உதவும்: தியோ நீ சிங்
October 8, 2024, 1:50 pm