
செய்திகள் மலேசியா
மலாக்கா இந்திய முஸ்லிம் சூராவ் அல்-முஸ்தகீமில் ஏற்படும் இட நெரிசலை தவிர்க்க மாநில அரசு உதவ வேண்டும்: தயுபு முகமத் கணி
மலாக்கா:
மலாக்கா இந்திய முஸ்லிம் சூராவ் அல்-முஸ்தகீமில் ஏற்படும் இட நெரிசலை தவிர்க்க மாநில அரசு உதவ வேண்டும்.
அச்சூராவ்வின் கட்டடக் குழுத் தலைவர் தயுபு முகமத் கணி இதனை கூறினார்.
மலாக்காவில் சூராவ் அல்-முஸ்தகீம் 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றை கொண்டதாகும்.
மலாக்கா மாநில வரலாற்றில் இந்திய முஸ்லிம்கள் மிகவும் முக்கியமானவர்களாக உள்ளனர்.
அச்சமுதாயத்தின் அடையாளமாக இந்த சூராவ் உள்ளது.
இந்த சூராவ்வில் தொடர்ந்து இட நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக நோன்பு காலத்தில் அதிகமான மக்கள் இங்கு தொழுகைக்கு வருவதால் இப்பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்று நோக்கி தான் சூராவ்வை பெரிதாக கட்ட வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த முயற்சிக்கு மாநில அரசு முழுமையான அங்கீகாரத்தையும் அனுமதியும் வழங்கவில்லை.
இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கான இருக்கும் இந்த ஒரு சூராவ்வையும் பெரிதாக மாநில அரசு உதவாமல் இருப்பது எங்களுக்கு பெரும் வேதனையை தருகிறது.
சூராவ் தலைவர் ராபு இப்ராஹிம் தலைமையில் அரசு அதிகாரிகள் உட்பட அனைவரையும் நாங்கள் பலமுறை சந்தித்து விட்டோம்.
ஆனால் எங்கள் பிரச்சினைக்கு மட்டும் தீர்வு பிறக்கவில்லை.
ஆகவே மாநில அரசு எங்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 5:36 pm
ஜொகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி
March 31, 2025, 5:35 pm
ஹர்ஷீதாவின் அறுவை சிகிச்சைக்கு நன்கொடை அளித்த மலேசியர்களுக்கு நன்றி: செல்வ கணபதி
March 31, 2025, 5:34 pm
நோன்பு பெருநாளின் போது பணியில் ஈடுபடும் போலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டுகள்: ஐஜிபி
March 31, 2025, 5:32 pm
நோன்பு பெருநாளின் உணர்வைத் தழுவுங்கள்; மோதலைத் தவிர்க்கவும் - ஃபஹ்மி
March 31, 2025, 5:31 pm
காராக் சாலை விபத்துக்கு காரணமாக லோரி ஓட்டுநர் நான்கு நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்
March 31, 2025, 5:30 pm
ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
March 31, 2025, 11:44 am
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்த ஒரு தனிநபரையும் ஆலோசகராக நியமித்ததில்லை: அப்துல் ஹக்கிம்
March 31, 2025, 11:43 am
பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையை மலேசியா, துருக்கி தொடர்ந்து வலியுறுத்தும்
March 31, 2025, 11:42 am