
செய்திகள் மலேசியா
மியான்மர்-தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
மியான்மர்-தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நேற்று மத்திய மியான்மர், வடக்கு தாய்லாந்தைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி மாண்டோர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் நிலையும் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் மிகவும் வருத்தமளிப்பதாக அன்வர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
தேவைக்கேற்ப மனிதாபிமான முயற்சிகளுக்கு உதவி வழங்கவும் ஆதரவளிக்கவும் மலேசியா தயாராக உள்ளது.
இந்தச் சூழலில் மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மலேசியாவும் அதன் அண்டை நாடுகளும் உதவவும் ஆதரவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 5:36 pm
ஜொகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி
March 31, 2025, 5:35 pm
ஹர்ஷீதாவின் அறுவை சிகிச்சைக்கு நன்கொடை அளித்த மலேசியர்களுக்கு நன்றி: செல்வ கணபதி
March 31, 2025, 5:34 pm
நோன்பு பெருநாளின் போது பணியில் ஈடுபடும் போலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டுகள்: ஐஜிபி
March 31, 2025, 5:32 pm
நோன்பு பெருநாளின் உணர்வைத் தழுவுங்கள்; மோதலைத் தவிர்க்கவும் - ஃபஹ்மி
March 31, 2025, 5:31 pm
காராக் சாலை விபத்துக்கு காரணமாக லோரி ஓட்டுநர் நான்கு நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்
March 31, 2025, 5:30 pm
ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
March 31, 2025, 11:44 am
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்த ஒரு தனிநபரையும் ஆலோசகராக நியமித்ததில்லை: அப்துல் ஹக்கிம்
March 31, 2025, 11:43 am
பாலஸ்தீனத்துடனான ஒற்றுமையை மலேசியா, துருக்கி தொடர்ந்து வலியுறுத்தும்
March 31, 2025, 11:42 am