நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியான்மார் நிலநடுக்கம்: பேங்காக்கில் சரிந்த கட்டடத்துக்குள் 40க்கும் அதிகமானோர் சிக்கினர்

பேங்காக்:

மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாய்லந்து தலைநகர் பேங்காக்கில் ஒரு கட்டடம் சரிந்து விழுந்துள்ளது.

கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டடத்துக்குக் கீழ் 40க்கும் அதிகமான ஊழியர்கள் மாட்டிக்கொண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

மியான்மாரின்  மாந்தளை வட்டாரத்துக்கு அருகே  7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மாரில் நிலவரம் எப்படி என்பது தெளிவாகத் தெரியவிலை. 

பேங்காக்கில் நூற்றுக்கணக்கானோர்  கட்டடங்களிலிருந்து வெளியேறி வீதிகளில் ஓடினர்.

சீனாவின் யுனான் வட்டாரத்திலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset