செய்திகள் உலகம்
குவைத்தில் கேரளா தொழிலதிபர் கட்டிடத்தில் தீ: 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் பலி
குவைத்:
குவைத் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரின் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் கருகி பலியாகி உள்ளனர்.
இவர்களில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 பேர், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் என தெரியவந்துள்ளது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரத்தில் 6 மாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கட்டிடமானது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்குச் சொந்தமானது.
இக் கட்டிடத்தில் வீட்டு பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதே பகுதியில் 200க்கும் அதிகமான தமிழர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்களும் தங்கி இருந்தனர்.
ஆபிரகாமுக்குச் சொந்தமான கட்டிடத்தில் பற்றிய தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் மாடிகளில் தங்கியிருந்தவர் தீயில் சிக்கியும் மூச்சுவிட முடியாமலும் திணறினர்.
இத்தீவிபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் கருகி பலியாகினர். இவர்களில் 2 பேர் தமிழர்கள். 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். வட இந்தியர்கள் 3 பேர் என தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 12:23 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் ஜெட்டை ஈரான் வீழ்த்தியது
March 21, 2026, 12:17 pm
அமெரிக்காவிற்கு 'இல்லை' என்று சொல்லும் துணிச்சலை இலங்கை காட்டுகிறது
March 21, 2026, 12:14 pm
"பண்டிகை இருக்கு.. ஆனால் கொண்டாட வழியில்லை": காசாவில் பொலிவிழந்த ஈகைத் திருநாள்
March 21, 2026, 9:29 am
தென் கொரியாவில் தொழிற்சாலை தீ விபத்து
March 21, 2026, 9:27 am
போர் இருந்தபோதிலும் ஈரான் ஏவுகணைகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது
March 20, 2026, 10:13 pm
"பணத்திற்காக பெட்டி சுமந்தேன்": வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்திய மலேசியர் கைது
March 20, 2026, 5:41 pm
ராயல் கிங்ஸ் சமூக இஃப்தார், சிங்கப்பூரின் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்கிறது
March 20, 2026, 4:13 pm
