செய்திகள் உலகம்
குவைத்தில் கேரளா தொழிலதிபர் கட்டிடத்தில் தீ: 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் பலி
குவைத்:
குவைத் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரின் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் கருகி பலியாகி உள்ளனர்.
இவர்களில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 பேர், வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் என தெரியவந்துள்ளது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரத்தில் 6 மாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கட்டிடமானது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்குச் சொந்தமானது.
இக் கட்டிடத்தில் வீட்டு பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இதே பகுதியில் 200க்கும் அதிகமான தமிழர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்களும் தங்கி இருந்தனர்.
ஆபிரகாமுக்குச் சொந்தமான கட்டிடத்தில் பற்றிய தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் மாடிகளில் தங்கியிருந்தவர் தீயில் சிக்கியும் மூச்சுவிட முடியாமலும் திணறினர்.
இத்தீவிபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 43 பேர் கருகி பலியாகினர். இவர்களில் 2 பேர் தமிழர்கள். 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். வட இந்தியர்கள் 3 பேர் என தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
ஆஸ்திரேலியத் தாக்குதலைத் தடுத்த அஹ்மதுக்கு $2.5 மில்லியன் நிதி
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் தீவிரவாதியுடன் தனி ஒருவராக நின்று போராடிய அஹமது அல் அஹமது
December 14, 2025, 9:43 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
December 14, 2025, 6:33 pm
