நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எரிசக்தி நெருக்கடி தீவிரம்: கியூபாவில் நாடு முழுவதும் இருள்

ஹவானா: 

எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்த நிலையில், கியூபா முழுவதும் மின்வலையமைப்பு சீர்குலைந்ததால் நாடு முழுவதும் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது.

மின்நிலையங்களில் கோளாறு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், சம்பவத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுமார் ஒரு கோடி மக்கள் வசிக்கும் இந்த நாடு, கடந்த சில மாதங்களாக கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதால், மின்சாரம் மாறிமாறி வழங்கப்பட்டு வந்தது. 

தினசரி தேவைக்காக மிகுந்த அளவு எரிபொருள் தேவைப்படுகின்ற நிலையில், உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருப்பது நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது.

மூன்று மாதங்களாக முக்கிய எரிபொருள் இறக்குமதி கிடைக்காதது, மேலும் அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம் ஆகியவை இந்த நிலையை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிபர் மிகுவேல் டியாஸ்-கனெல் தெரிவித்தார். பழமையான மின்சார கட்டமைப்பும் அடிக்கடி மின்தடைக்கு காரணமாக உள்ளது.

இந்த நெருக்கடியால் மக்கள் அதிருப்தி அதிகரித்து, சில இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மின்சாரம், உணவு, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை காரணமாக கலவரங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தை நிலைநிறுத்த வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் முயற்சிகளை அரசு பரிசீலித்து வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset