செய்திகள் மலேசியா
ஜொகூரில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரிப்பு
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலத்தில் கடந்த 8 வாரங்களில் கோவிட்-19 தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் லிங் தியான் சூன் உறுதிப்படுத்தினார்.
இம்மாதம் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 263 கோவிட்19 பாதிப்புகள் ஜொகூரில் பதிவாகியுள்ளது.
அதற்கு முந்திய வாரத்தில் 249 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
ஏப்ரல் 15 முதல் 21 வரை 109 கோவிட்19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதற்கு முந்திய வாரம் 34 சம்பவங்கள் மட்டுமே பதிவாயின.
கடந்த 3 வாரங்களில் பதிவான பெரும்பாலான கோவிட்19 சம்பவங்கள் ஜொகூர் பாரு, பத்து பஹாட், கூலாய், மூவார் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றன.
14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கும்படியும் கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியும்படியும் மக்களுக்கு ஆலோசனை தரப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 22, 2026, 4:51 pm
பண மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு நீதி கோரி பேங்க் நெகாராவில் மகஜர் வழங்கப்பட்டது: டத்தோ கலைவாணர்
January 22, 2026, 12:59 pm
தொடக்கப்பள்ளியில் பகடிவதையா?: ஒன்றாம் ஆண்டு மாணவன் தாக்கப்பட வழக்கில் போலீஸ் விசாரணையை தொடங்கியது
January 22, 2026, 12:11 pm
பங்சார் தமிழ்ப்பள்ளிக்கு 100 மடிக்கணினிகள்; இந்திய சமுதாயத்திற்கு கல்வியே சிறந்த முதலீடு: ஃபஹ்மி
January 22, 2026, 12:09 pm
பத்துமலை தைப்பூச விழாவின் போது ஆற்றங்கரையில் சுத்தத்தை பாதுகாப்பது பக்தர்களின் கடமையாகும்: டான்ஸ்ரீ நடராஜா
January 22, 2026, 11:33 am
RM2.12 மில்லியன் லஞ்ச வழக்கு: முன்னாள் இராணுவத் தளபதி தாம் லஞ்சம் பெறவில்லை என்று வாதம்
January 22, 2026, 11:24 am
மலேசியாவில் மனிதக் கடத்தல் கும்பல்: இருவர் கைது
January 22, 2026, 9:41 am
வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் இணையக் கல்விக்கழக திட்டம்
January 22, 2026, 8:36 am
