
செய்திகள் மலேசியா
ஆர்.டி.எஸ் இணைப்பு திட்டம் குறித்து துன் மகாதீருக்கு விளக்கமளிக்கத் தயார்: அந்தோனி லோக்
ஜார்ஜ் டவுன்:
ஜொகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் இடையே ஆர்.டி.எஸ் இணைப்பு திட்டம் குறித்துத் தொடர்பாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மதுக்கு விளக்கமளிக்க தாம் தயார் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
திங்களன்று தனது முகநூலில் ஒரு பதிவில் டாக்டர் மகாதீர் எழுதிய கருத்துகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அந்தோனி லோக் இவ்வாறு கூறினார்.
அவர் 7-ஆவது பிரதமராக இருந்தபோது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தை டாக்டர் மகாதீர் மறந்துவிட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்தப்போது நான், இந்த RTS திட்டத்தைத் தொடர அமைச்சரவை ஆவணத்தைச் சமர்ப்பித்து அதற்கு துன் மகாதீர் அவர்களே ஒப்புதல் அளித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதனை அவர் மறந்து இருக்கலாம். அதனால் இது குறித்து அவருக்குச் சிறப்பு விளக்கமளிக்க தாம் தயார் என்று அந்தோனி லோக் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 14, 2025, 8:16 am
இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுக்க அனைத்து உயர் கல்விக் கூடங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜம்ரி
October 13, 2025, 10:44 pm
6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
October 13, 2025, 10:34 pm
தமிழ்நாடு அரசு வழங்கும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான NRT நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் 2025
October 13, 2025, 5:50 pm
பிரதமருடன் எந்த பிரச்சினையும் இல்லை; தேமு தலைவருடன் தான் எங்களுக்கு பிரச்சினை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 5:04 pm
இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 4:10 pm
மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்
October 13, 2025, 4:09 pm
சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: நஜிப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
October 13, 2025, 12:57 pm