செய்திகள் மலேசியா
ஆர்.டி.எஸ் இணைப்பு திட்டம் குறித்து துன் மகாதீருக்கு விளக்கமளிக்கத் தயார்: அந்தோனி லோக்
ஜார்ஜ் டவுன்:
ஜொகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் இடையே ஆர்.டி.எஸ் இணைப்பு திட்டம் குறித்துத் தொடர்பாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மதுக்கு விளக்கமளிக்க தாம் தயார் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
திங்களன்று தனது முகநூலில் ஒரு பதிவில் டாக்டர் மகாதீர் எழுதிய கருத்துகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அந்தோனி லோக் இவ்வாறு கூறினார்.
அவர் 7-ஆவது பிரதமராக இருந்தபோது ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தை டாக்டர் மகாதீர் மறந்துவிட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்தப்போது நான், இந்த RTS திட்டத்தைத் தொடர அமைச்சரவை ஆவணத்தைச் சமர்ப்பித்து அதற்கு துன் மகாதீர் அவர்களே ஒப்புதல் அளித்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதனை அவர் மறந்து இருக்கலாம். அதனால் இது குறித்து அவருக்குச் சிறப்பு விளக்கமளிக்க தாம் தயார் என்று அந்தோனி லோக் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 3:33 pm
சபாவில் லாரி, கார் மோதி கொடூர விபத்து: நால்வர் பரிதாபமாக பலி
September 9, 2026, 3:31 pm
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மன்னிப்பு விண்ணப்பம் இவ்வாரத்தில் கலந்தோசிக்கப்படுகிறதா ?
September 9, 2026, 2:44 pm
அஸிஸ் நாளை வரை போலிஸ் காவலில் இருப்பார்
September 9, 2026, 2:43 pm
பெர்கேசோவின் 24 மணி நேர பாதுகாப்பு திட்டத்தை தனியார் காப்புறுதிகளுடன் ஒப்பிட வேண்டாம்: டத்தோஶ்ரீ அஸ்மான்
September 9, 2026, 2:42 pm
இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு விமானி கைது
September 9, 2026, 1:56 pm
நஜிப்பின் கருணை மனு குறித்து இந்த வாரம் மன்னிப்பு வாரியம் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 9, 2026, 12:45 pm
பேராக் மாநிலம் சூப்பர் எல்-நினோவை எதிர்கொள்ள தயார்: மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் தகவல்
September 9, 2026, 12:31 pm
