செய்திகள் மலேசியா
டீசலுக்கான உதவித் தொகை அகற்றப்பட்டதால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்த்தப்படாது: பிரெஸ்மா
கோலாலம்பூர்:
டீசலுக்கான உதவித் தொகை அகற்றப்பட்டதால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் உணவுகளின் விலை உயர்த்தப்படாது
பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி இதனை உறுதியாக கூறினார்.
உதவித் தொகை அகற்றப்பட்டதால் தற்போது டீசல் 3.35 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.
இதனால் இந்திய முஸ்லிம் உணவகங்களில் உணவு, பானங்களின் விலையில் எந்த உயர்வும் இருக்காது.
தற்போது, நாடு முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட பிரெஸ்மா உறுப்பினர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய விலையை நிலை நிறுத்த முடியும்.
இந்த விவகாரத்தில் நாங்கள் சமூக கடப்பாட்டுடன் நடந்துக் கொள்கிறோம்.
விலையை எங்களால் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியும். யாராவது விலையை உயர்த்த வேண்டும் என்றால் அது குறித்து எந்த முடிவும் எடுக்க மாட்டோம்.
ஆகவே பிரஸ்மா உறுப்பினர்கள் டீசல் விலை அதிகரிப்பை காரணம் காட்டி உணவகங்களில் உணவு, பானங்களின் விலையை உயர்த்த வேண்டாம் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 3, 2026, 11:55 pm
சீர்திருத்தத்திற்கு இனப் பிரச்சினைகள் முக்கிய சவால்: பிரதமர்
January 3, 2026, 11:54 pm
சீர்திருத்தம் என்பது நமது ஆணையாகும்; இந்தப் போராட்டம் முடிவடையவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
January 3, 2026, 11:53 pm
ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரையின் மகத்துவத்தை பாத்தேக் ஏர் மதிக்கிறது: டத்தோ சந்திரன்
January 3, 2026, 11:52 pm
கேஎல்ஐஏ விமான நிலையத்தில் சிறப்பு சலுகைகளுடன் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு புறப்பட்டனர்: குணராஜ்
January 3, 2026, 2:26 pm
பள்ளி பேருந்து ஓட்டுநர்களின் மூன்று கோரிக்கைகளை அரசாங்கம் அமலுக்கு கொண்டு வர வேண்டும்: ராமதாஸ்
January 3, 2026, 2:24 pm
ரமலான் சந்தைக்கான அனுமதிகளைப் பெற முகவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: பிரதமர்
January 3, 2026, 2:23 pm
2026ஆம் ஆண்டுக்கான பள்ளி சீருடையில் மாற்றம் இல்லை: கல்வி இயக்குநர்
January 3, 2026, 7:16 am
அதிகாலை சோதனையில் சிக்கிய காதல் ஜோடி: யாபா போதைப்பொருள் பறிமுதல்
January 2, 2026, 10:15 pm
