செய்திகள் உலகம்
பிரான்சில் இம்மாதம் தேர்தல் நடத்தப்படும்: மெக்ரோன் தீடீர் அறிவிப்பு
பாரிஸ்:
பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன், பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தல் இம்மாதம் நடைபெறும் என்று திடீரென அறிவித்துள்ளார்.
அதிபர் மெக்ரோனின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இம்மாதம் நடத்தப்பட்டால் அதில் அதிபர் மெக்ரோன் தோல்வி அடைவதற்கான சாத்தியம் அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அடுத்த தேர்தலை நடத்த இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதிபர் மெக்ரோனின் இந்த முடிவு வியப்பளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் தமக்கு ஏற்பட்ட தோல்வியைப் புறக்கணித்து விட முடியாது என்று அதிபர் மெக்ரோன் கூறினார்.
கீழவைத் தேர்தல் ஜூன் 30-ஆம் தேதி நடைபெறும் என்றும் இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் தீவிரவாதியுடன் தனி ஒருவராக நின்று போராடிய அஹமது அல் அஹமது
December 14, 2025, 9:43 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
December 14, 2025, 6:33 pm
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்: 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
December 13, 2025, 10:57 am
மியான்மர் ராணுவ தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்: 34 பேர் உயிரிழந்தனர்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
