செய்திகள் மலேசியா
புந்தோங் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 11ஏ பெற்று சாதனை
ஈப்போ:
இடைநிலைப்பள்ளிகளில் வெளியான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 11ஏ பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புந்தோங் வட்டாரத்தில் ஸ்ரீ புத்ரி பெண்கள் இடைநிலைப் பள்ளியில் இங்குள்ள 5 தமிழ்ப்பள்ளியை பின்னணி கொண்ட மாணவிகள் படித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இம்முறை 3 மாணவிகள் 11 ஏ பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இவர்களில் நேசமணி விக்டர், அனக லெச்சிமி வேலாயுதம், பாக்கியலெச்சிமி ஆறுமுகம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இம்மாணவிகளை தவிர்த்து கார்த்திகா நீலமேகம் 10ஏ 1 பி மற்றும் நர்மித்தா பொன்னிராஜா, கவின்மலர் நல்லகுமார், பகவதி கார்த்திகேசு ஆகியோர் 9ஏ கிடைக்கப்பெற்ற மாணவிகளாவர்.
இம்முறை புந்தோங்கின் ஆண்கள் இடைநிலைப்பள்ளி மாணவன் தனு அக்சை சிவசுப்பிரமணியம் 9 ஏ பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவர்களில் பெரும்பாலோர் திட்டமிட்டு நேரத்தை நன்கு நிர்வகித்து பாடங்களை படித்து வந்ததால் இத்தகைய சிறந்த தேர்வு முடிவு கிடைத்துள்ளதாக கூறினர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்பணிப்பு மற்றும் தியாக மனப்பான்மையால் வெற்றி பெற்றதாக கருத்துரைத்தனர்.
- ஆர்.பாலசந்தர்
தொடர்புடைய செய்திகள்
January 29, 2026, 11:05 pm
மனிதக் கடத்தல் வலையில் சிக்கிய 57 சிறுவர்கள் உட்பட 138 பேர் மீட்பு: டத்தோ குமார்
January 29, 2026, 9:18 pm
நெகிரி செம்பிலானில் அதிரடி நடவடிக்கை: கட்டுமானத் தளத்தில் 30 வெளிநாட்டவர் கைது
January 29, 2026, 7:00 pm
ஒரே நொடியில் அழிந்த 25 ஆண்டுக்கால உழைப்பு: RM35,000 பணம் தீக்கிரை
January 29, 2026, 2:12 pm
KLIA-வில் லஞ்சம் பெற்றதாக குடிநுழைவு அதிகாரி மீது ஏழு குற்றச்சாட்டுகள்
January 29, 2026, 1:16 pm
வெளிப்புற தலையீடு இல்லாமல் இராணுவப் படைகளின் உயர் பதவி நியமனங்கள் இருக்க வேண்டும்: காலித் நோர்டின்
January 29, 2026, 1:06 pm
இரவு முழுவதும் தேடிய 83 வயது மூதாட்டி உயிருடன் கண்டுபிடிப்பு
January 29, 2026, 11:51 am
