செய்திகள் மலேசியா
புந்தோங் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 11ஏ பெற்று சாதனை
ஈப்போ:
இடைநிலைப்பள்ளிகளில் வெளியான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில் தமிழ்ப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 11ஏ பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புந்தோங் வட்டாரத்தில் ஸ்ரீ புத்ரி பெண்கள் இடைநிலைப் பள்ளியில் இங்குள்ள 5 தமிழ்ப்பள்ளியை பின்னணி கொண்ட மாணவிகள் படித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இம்முறை 3 மாணவிகள் 11 ஏ பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இவர்களில் நேசமணி விக்டர், அனக லெச்சிமி வேலாயுதம், பாக்கியலெச்சிமி ஆறுமுகம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இம்மாணவிகளை தவிர்த்து கார்த்திகா நீலமேகம் 10ஏ 1 பி மற்றும் நர்மித்தா பொன்னிராஜா, கவின்மலர் நல்லகுமார், பகவதி கார்த்திகேசு ஆகியோர் 9ஏ கிடைக்கப்பெற்ற மாணவிகளாவர்.
இம்முறை புந்தோங்கின் ஆண்கள் இடைநிலைப்பள்ளி மாணவன் தனு அக்சை சிவசுப்பிரமணியம் 9 ஏ பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவர்களில் பெரும்பாலோர் திட்டமிட்டு நேரத்தை நன்கு நிர்வகித்து பாடங்களை படித்து வந்ததால் இத்தகைய சிறந்த தேர்வு முடிவு கிடைத்துள்ளதாக கூறினர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்பணிப்பு மற்றும் தியாக மனப்பான்மையால் வெற்றி பெற்றதாக கருத்துரைத்தனர்.
- ஆர்.பாலசந்தர்
தொடர்புடைய செய்திகள்
November 28, 2025, 11:09 pm
பிரதமரின் முன்னாள் செயலாளர் ஷம்சுல் இஸ்கண்டாரையும் எம்ஏசிசி கைது செய்தது
November 28, 2025, 11:07 pm
ஆல்பர்ட் டீயை நோக்கி அதிகாரிகள் துப்பாக்கியை நீட்டியதாக எழுந்த குற்றச்சாட்டை டான்ஸ்ரீ அஸாம் பாக்கி மறுத்தார்
November 28, 2025, 11:06 pm
வெப்ப மண்டல புயலின் தாக்கம் முடிவுக்கு வந்தது: மெட் மலேசியா
November 28, 2025, 11:04 pm
கேப்ரைஸ் அச்சுறுத்தல் வழக்கு: என்எப்ஏ என வகைப்படுத்தப்பட்டுள்ளது
November 28, 2025, 2:30 pm
MS Gold 5ஆவது கிளையின் திறப்பு விழா: டத்தோ மாலிக்கின் தாயார் திறந்து வைத்தார்
November 28, 2025, 2:24 pm
முகமூடி அணிந்த எம்ஏசிசி அதிகாரிகள் தொழிலதிபர் ஆல்பர்ட் டெய்யை கைது செய்தனர்
November 28, 2025, 11:59 am
பள்ளிகளில் திடல் இல்லை என்பது விளையாடும் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு மிகப் பெரிய துயரமாகும்: டத்தோஸ்ரீ சரவணன்
November 28, 2025, 11:57 am
