செய்திகள் மலேசியா
பயனீட்டாளர் கடன் சட்டத்திற்கு உட்பட்டு கடன் வசூல் நிறுவன துறையை நெறிப்படுத்தும் நோக்கில் AMCRA நிறுவப்பட்டுள்ளது: ரோஹன் ஜெயரத்தினம்
கோலாலம்பூர்:
கடன் வசூல் நிறுவன துறையை நெறிப்படுத்தும் நோக்கில் இயக்கம் நிறுவப்பட்டுள்ளது.
பயனீட்டாளர் கடன் சட்டம் 2025ஐ உட்பட்டு இந்த இயக்கம் செயல்படும் என்று அதன் தலைவர் ரோஹன் ஜெயரத்தினம் கூறினார்.
மலேசிய கடன் வசூல் நிறுவனங்களின் அமைப்பாக AMCRA விளங்குகிறது.
நாட்டில் உள்ள நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த AMCRA இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது.
நாட்டின் கடன் மீட்புத் துறையை நெறிப்படுத்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக கடன் வசூல் நடைமுறைகள் நெறிமுறை ரீதியாகவும் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும் மேற்கொள்ளப்படுவதை இது உறுதி செய்கிறது.
கடன் வசூல் நிறுவனங்கள், கடன் வழங்குநர்கள், கடன் வாங்குபவர்களுக்கு இடையேயான தொடர்புக்கான அதிகாரப்பூர்வ பாலமாக இருப்பதுடன், தொழில்துறையினரை ஒரு தெளிவான தளத்தின் கீழ் ஒன்றிணைப்பதற்கு இந்த சங்கத்தின் பங்கு முக்கியமானது.
இந்தத் துறை முன்னர் சீரான அணுகுமுறைகள், தரநிலைகளுடன் செயல்பட்டது.
இது பொதுமக்களிடமிருந்து பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள், புகார்களுக்கு வழிவகுத்தது.
கடன் வாங்குபவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் உரிமைகளும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் அதே வேளையில், தொழில்முறை, நெறிமுறை, பொறுப்பான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக AMCRA நிறுவப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற, பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே கடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று குறிப்பிடும் பயனீட்டாளர் கடன் சட்டம் 2025 ஐ செயல்படுத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
இந்தச் சட்டம், தொழில்துறைக்கு கடுமையான கண்காணிப்பு பொறிமுறையை நிறுவுவதோடு, கடன் வாங்குபவர்களை எந்தவிதமான மிரட்டல், துன்புறுத்தல் அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதையும் தடை செய்கிறது.
புதிய சட்டத்தை AMCRA முழுமையாக ஆதரிக்கிறது.
மேலும் தொழில்துறை மட்டத்தில் அதன் செயல்படுத்தல் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது.
சட்டத்தை மீறுபவர்களை பாதுகாப்பது சங்கத்தின் நோக்கமல்ல.
மாறாக உறுப்பினர்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சட்டத் தேவைகளை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும் உதவுவதே சங்கத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 29, 2026, 9:18 pm
நெகிரி செம்பிலானில் அதிரடி நடவடிக்கை: கட்டுமானத் தளத்தில் 30 வெளிநாட்டவர் கைது
January 29, 2026, 7:00 pm
ஒரே நொடியில் அழிந்த 25 ஆண்டுக்கால உழைப்பு: RM35,000 பணம் தீக்கிரை
January 29, 2026, 2:12 pm
KLIA-வில் லஞ்சம் பெற்றதாக குடிநுழைவு அதிகாரி மீது ஏழு குற்றச்சாட்டுகள்
January 29, 2026, 1:16 pm
வெளிப்புற தலையீடு இல்லாமல் இராணுவப் படைகளின் உயர் பதவி நியமனங்கள் இருக்க வேண்டும்: காலித் நோர்டின்
January 29, 2026, 1:06 pm
இரவு முழுவதும் தேடிய 83 வயது மூதாட்டி உயிருடன் கண்டுபிடிப்பு
January 29, 2026, 11:51 am
உடல்நலக் குறைபாடு இருந்தபோதும் தைப்பூச மரபை உயிர்ப்பிக்கும் ஞானாபிரகாசம்
January 29, 2026, 10:53 am
