
செய்திகள் உலகம்
புனித ஹஜ்ஜுப் பயண முகவர்கள் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையிடம் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்: சிங்கப்பூர் அரசு அறிவிப்பு
சிங்கப்பூர்:
இந்த ஆண்டு புனித ஹஜ்ஜுப் பயணத்தை முன்னிட்டு அனைத்துப் பயண முகவர்களும் நியமிக்கப்படும் அதிகாரிகளும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையிடம் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.
உயிர்க்காப்பு, நெருக்கடிகாலத் தயார்நிலை போன்றவை பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்படும்.
ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்ளும் 900 சிங்கப்பூரர்களுடன் மருத்துவ அதிகாரிகளும் செல்கின்றனர்.
சிங்கப்பூர் யாத்ரீகர்கள் விவகார அலுவலகம் சவுதியைத் தளமாகக் கொண்ட மருத்துவச்சேவை அமைப்புடன் இணைந்து செயல்படவிருக்கிறது.
ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொள்வோருக்காக ஏற்பாடுசெய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் அதுகுறித்து அறிவிக்கப்பட்டது.
பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் சென்றுவருவதற்காக அந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான் (Maliki Osman) அந்த ஆண்டு ஹஜ்ஜுப் பயண ஏற்பாடுகளை வழிநடத்துகிறார்.
சிங்கப்பூரிலிருந்து முதல் குழு ஜூன் 3ஆம் தேதி புறப்படவிருக்கிறது.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
March 19, 2025, 3:34 pm
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர் வரை இருக்கலாம்
March 19, 2025, 12:35 pm
விண்வெளியில் அதிக நாட்களைக் கழித்த 2-ஆவது அமெரிக்க விஞ்ஞானியானார் சுனிதா வில்லியம்ஸ்
March 19, 2025, 12:10 pm
பாகிஸ்தானில் சீனாவின் மோசடி கால் சென்டர்: பொது மக்கள் கொள்ளை
March 18, 2025, 3:26 pm
விமானம் தண்ணீருக்குள் விழுந்தது: 7 பேர் மரணம்
March 18, 2025, 12:04 pm
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன
March 18, 2025, 11:43 am
பிட்காயினை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பூர் இளைஞர் அமெரிக்காவில் கைது
March 18, 2025, 11:14 am