
செய்திகள் உலகம்
சிங்கப்பூரின் 4ஆவது பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்றார்
சிங்கப்பூர்:
லாரன்ஸ் வோங் (Lawrence Wong) இன்று சிங்கப்பூரின் 4ஆவது பிரதமராகப் பதவியேற்றார்.
பதவியேற்புச் சடங்கு இரவு 8 மணிக்கு இஸ்தானாவில் தொடங்கியது.
800க்கும் அதிகமானோர் பதவியேற்புச் சடங்கைக் காண இஸ்தானாவில் திரண்டிருந்தனர்.
நாட்டின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திரு வோங், மாறுபட்ட தலைமைத்துவப் பாணியைப் பின்பற்றுவதற்கு உறுதியளித்தார்.
சிங்கப்பூர்க் கதையின் சிறந்த அத்தியாயங்கள் எழுதப்படவேண்டும் என்றார் அவர்.
அதிபர் தர்மன் சண்முகரத்னத்தின் முன்னிலையில் பதவியேற்புச் சடங்கு இடம்பெற்றது.
நாட்டின் தலைமைத்துவ மாற்றம் சுமுகமாகவும் சீராகவும் நடைபெற்றதை அவர் பாராட்டினார்.
தலைமைத்துவ மாற்றம் அரசியல் நிலைத்தன்மையைப் பாதுகாத்திருக்கிறது என்றார் அதிபர்.
அத்துடன் அரசாங்கம் நீண்ட காலத்துக்குத் திட்டமிடவும் அது வழியமைத்திருப்பதாக அவர் சொன்னார்.
நாடு பொறுப்பானவர்களின் கையில் இருக்கிறது என்று அதிபர் தர்மன் சிங்கப்பூரர்களுக்கு உத்தரவாதம் அளித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 19, 2025, 3:34 pm
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர் வரை இருக்கலாம்
March 19, 2025, 12:35 pm
விண்வெளியில் அதிக நாட்களைக் கழித்த 2-ஆவது அமெரிக்க விஞ்ஞானியானார் சுனிதா வில்லியம்ஸ்
March 19, 2025, 12:10 pm
பாகிஸ்தானில் சீனாவின் மோசடி கால் சென்டர்: பொது மக்கள் கொள்ளை
March 18, 2025, 3:26 pm
விமானம் தண்ணீருக்குள் விழுந்தது: 7 பேர் மரணம்
March 18, 2025, 12:04 pm
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன
March 18, 2025, 11:43 am
பிட்காயினை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பூர் இளைஞர் அமெரிக்காவில் கைது
March 18, 2025, 11:14 am