செய்திகள் உலகம்
ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: 4 குண்டுகள் பாய்ந்தன
பிராடிஸ்லாவா:
துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ (59) நிலை கவலையளிப்பதாக அவரின் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஹாண்ட்லோவா நகரில் கலாச்சார மையத்துக்கு வெளியே அவர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் ராபர்ட்டின் வயிற்றில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளன.
தலைநகருக்கு 150 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு தனது ஆதரவாளர்களை சந்திக்க பிரதமர் வந்துள்ளார். அவரை தாக்கியதாக கருதப்படும் நபரை காவலர்கள் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

ஸ்லோவாகியா பாராளுமன்றத்தின் துணை சபாநாயகர் இந்த நிகழ்வை உறுதிப்படுத்தியதோடு தேதி குறிப்பிடாமல் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.
இது தொடர்பாக ஸ்லோவாகியா நாட்டின் அதிபர் ஸூஸனா காபுடோ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் ராபர்ட் விரைவில் குணமாக வேண்டும் எனவும் அதற்கான ஆற்றல் பெற பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மூன்று வாரங்களில் நடக்கவுள்ள நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த 59 வயதான ஸ்லோவாகியா பிரதமரின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 27 நாடுகளில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் வலதுசாரி கட்சிகள் ஆதாயம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 28, 2026, 12:02 pm
ஈரானின் புஷ்ஹேர் அணு மின்நிலையம் மூன்றாவது முறையாக தாக்கப்பட்டது
March 28, 2026, 11:21 am
போக்கிமான் கடையில் இரத்தக் களரி
March 28, 2026, 10:28 am
நவீன வசதிகளுடன் ஒரு சிறிய சொர்க்கம்
March 27, 2026, 5:34 pm
எல்லைகளைக் கடந்த மனிதாபிமானம்: ஓமன் வெள்ளத்தில் இந்தியர்களைக் காப்பாற்றிய பாகிஸ்தான் வீரர்
March 27, 2026, 3:18 pm
ஈரானின் கெஷ்ம் தீவுக்கு அருகே தாய்லாந்து சரக்குக் கப்பலான மயூரி நாரி தாக்கப்பட்டது
March 27, 2026, 11:07 am
சுங்கச்சாவடி அமைப்பு மூலம் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துகிறது ஈரான்
March 27, 2026, 10:38 am
“கழிப்பறை காகிதப் பற்றாக்குறையால் பதற்றம் தேவையில்லை”: மக்களிடம் ஜப்பான் அரசின் வேண்டுகோள்
March 27, 2026, 10:32 am
