செய்திகள் உலகம்
ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: 4 குண்டுகள் பாய்ந்தன
பிராடிஸ்லாவா:
துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ (59) நிலை கவலையளிப்பதாக அவரின் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஹாண்ட்லோவா நகரில் கலாச்சார மையத்துக்கு வெளியே அவர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் ராபர்ட்டின் வயிற்றில் நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளன.
தலைநகருக்கு 150 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு தனது ஆதரவாளர்களை சந்திக்க பிரதமர் வந்துள்ளார். அவரை தாக்கியதாக கருதப்படும் நபரை காவலர்கள் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

ஸ்லோவாகியா பாராளுமன்றத்தின் துணை சபாநாயகர் இந்த நிகழ்வை உறுதிப்படுத்தியதோடு தேதி குறிப்பிடாமல் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.
இது தொடர்பாக ஸ்லோவாகியா நாட்டின் அதிபர் ஸூஸனா காபுடோ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் ராபர்ட் விரைவில் குணமாக வேண்டும் எனவும் அதற்கான ஆற்றல் பெற பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மூன்று வாரங்களில் நடக்கவுள்ள நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த 59 வயதான ஸ்லோவாகியா பிரதமரின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 27 நாடுகளில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் வலதுசாரி கட்சிகள் ஆதாயம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
