![image](https://imgs.nambikkai.com.my/gaza.jpeg)
செய்திகள் இந்தியா
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இந்திய அதிகாரி பலி
நியூயார்க்:
இஸ்ரேல் நடத்திவரும் மனிதாபிமானமற்ற துப்பாக்சிச் சூட்டில் இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியும், ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியுமான 46 வயதான வைபவ் அனில் காலே உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயைச் சேர்ந்த வைபவ், அண்மையில் ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ராஃபா நகரில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு ஐ.நா.வாகனத்தில் வைபவ் அனில் திங்கள்கிழமை சென்றபோது, அந்த வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் வைபவ் அனில் உயிரிழந்தார். ஐ.நா. பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மற்றொரு அலுவலர் காயமடைந்தார்.
ஐ.நா.வுக்காக பணியாற்றிய வெளிநாட்டவர் ஒருவர் தாக்குதலில் முதல்முறையாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. என்று தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2024, 6:05 pm
புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது
July 25, 2024, 10:15 pm
நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க பேரவையில் தீர்மானம்
July 24, 2024, 5:33 pm
இந்தியா கூட்டணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்
July 24, 2024, 12:47 pm
நிபா வைரஸ் பரவல்: பொது முடக்கம் அறிவிப்பு
July 23, 2024, 5:24 pm
CROWDSTRIKE நிறுவனத்திற்கு ரூ.75,000 கோடி இழப்பு
July 23, 2024, 5:15 pm
காவடி ஊர்வலம் செல்லும் பாதை கடைகளில் உரிமையாளர் பெயர் எழுதும் உத்தரவுக்கு தடை
July 23, 2024, 4:52 pm
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்
July 23, 2024, 4:17 pm
ஆர்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க இருந்த தடை 58 ஆண்டுகளுக்கு பிறகு நீக்கம்
July 23, 2024, 3:40 pm