செய்திகள் உலகம்
பொருளியல் மந்தநிலையால் நியூசிலாந்திலிருந்து வெளியேறும் மக்கள்
வெலிங்டன்:
நியூசிலாந்தில் பொருளியல் மந்தநிலை காரணமாக வேலை வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன.
இதன் காரணமாக முன்பு இல்லாத அளவில் அந்நாட்டு மக்கள் பலர் அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
மார்ச் மாதம் நிலவரப்படி நியூசிலாந்துக் குடிமக்கள் 78,200 பேர் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்ததாக நியூசிலாந்துப் புள்ளிவிவரத்துறை தெரிவித்தது.
பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 74,900ஆக இருந்தது.
நியூசிலாந்திலிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வோர் எண்ணிக்கை முதல்முறையாக 50,000க்கும் அதிகமாகப் பதிவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
உயர் வட்டி விகிதங்களால் பயனீட்டாளர்கள் முன்பு போல அதிகம் செலவு செய்வதில்லை.
அதுமட்டுமல்லாது, வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வேலைக்கு ஆள்சேர்ப்பதும் குறைந்துள்ளது.
இதன் விளைவாக வேலை கிடைக்காமல் தவிக்கும் நியூசிலாந்து நாட்டினர் பலர் ஆஸ்திரேலியாவுக்கும் மற்ற நாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர்.
நியூசிலாந்தில் வழங்கப்படும் சம்பளத்தைவிட வெளிநாடுகளில் அவர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நியூசிலாந்து மக்களை ஈர்க்க ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையும் காவல்துறையும் அவர்களுக்கு உயர் சம்பளம் மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன.
நியூசிலாந்திலிருந்து வெளியேறும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் வேளையில், அங்கு இடம்பெயரும் வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி 139,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்தனர்.
ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வருகின்றது.
நியூசிலாந்துக்கு இடம்பெயரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்து மாதங்களாகச் சரிந்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் தீவிரவாதியுடன் தனி ஒருவராக நின்று போராடிய அஹமது அல் அஹமது
December 14, 2025, 9:43 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
December 14, 2025, 6:33 pm
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்: 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
December 13, 2025, 10:57 am
மியான்மர் ராணுவ தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்: 34 பேர் உயிரிழந்தனர்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
