செய்திகள் இந்தியா
நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை: NTA விளக்கம்
புது டெல்லி:
நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை என்றும் அது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என்றும் அத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை NTA தெரிவித்தது.
நீட் தேர்வு இந்தியாவில் 557 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தநிலையில், நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக, சமூக ஊடகங்களில் நீட் வினாத் தாள் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை மறுத்த என்டிஏ அதிகாரிகள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் ஹிந்தி மொழித் தேர்வர்களுக்கு தேர்வு மைய அதிகாரி தவறுதலாக ஆங்கில மொழி கேள்வித் தாளை விநியோகம் செய்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில மாணவர்கள், தேர்வு மையத்திலிருந்து விதிகளை மீறி அந்த வினாத்தாளுடன் வெளியேறி வினாத்தாளை புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஆனால், அதற்குள்ளாக மற்ற மையங்களில் நீட் தேர்வு தொடங்கிவிட்டது என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 10:29 pm
அனைவரின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்: இந்தியா கூட்டணி
May 19, 2024, 10:14 pm
எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல் காந்தி
May 18, 2024, 8:37 pm
ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: சோனியா
May 18, 2024, 8:19 pm
ஆம் ஆத்மி பெண் எம்பி தாக்கப்பட்டாரா?: பாஜகவின் சதி என குற்றச்சாட்டு
May 17, 2024, 7:22 pm
கோவேக்ஸின் செலுத்திக் கொண்ட 30%பேருக்கு பாதிப்பு
May 17, 2024, 4:48 pm
கேரளம்: சிறுமிக்கு கை விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை
May 16, 2024, 5:35 pm
இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு: மம்தா திடீர் முடிவு
May 16, 2024, 4:58 pm