நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அனைவரின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்: இந்தியா கூட்டணி

மும்பை:

அனைவரின் மதச் சுதந்திரத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி உறுதி அளிக்கிறது என்று இந்தியா கூட்டணி உறுதி அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவார், சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது, எனது 53 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், மோடியைப் போல மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசும் பிரதமரை கண்டதில்லை.

காங்கிரஸ் யாருக்கு எதிராகவும் "புல்டோஸரை' ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. காங்கிரஸ் இதுவரை செய்யாத அல்லது செயல்படுத்த முடியாத விஷயங்கள் குறித்து பொய்யாக பேசி, மக்களைத் தூண்டிவிடுவது மோடியின் பழக்கமாகிவிட்டது.

மோடி எங்கு சென்றாலும், மக்களைத் தூண்டிவிடும் வகையில் அவதூறாகப் பேசி, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகிறார். இதற்காக, அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset