செய்திகள் இந்தியா
மணிப்பூரில் ஒரே ஆண்டில் 67,000 பேர் இடம்பெயர்ந்தனர்
புது டெல்லி:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டில் இனக் கலவரம் காரணமாக 67,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இது தெற்காசியாவில் 69,000 பேர் இடம்பெயர்வில் 97 சதவீதமாகும் என்று சர்வதேச உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் ITMC தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது.
பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரும் மைதேயி சமூகத்தினருக்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கவலரமாக வெடித்தது.
இருதரப்பினர் மோதல்களால் மாநிலமே போர்க் களம்போல் மாறியுள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் 50,000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ITMC மணிப்பூரில் கடந்த ஆண்டில் 67,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்று தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 1:29 pm
Indigo விமானத்தில் வெடிகுண்டுப்புரளி: சந்தேக நபர் தேடப்படுகிறார்
November 2, 2025, 11:55 am
இந்தியாவில் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் மரணம்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
