
செய்திகள் இந்தியா
மணிப்பூரில் ஒரே ஆண்டில் 67,000 பேர் இடம்பெயர்ந்தனர்
புது டெல்லி:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டில் இனக் கலவரம் காரணமாக 67,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இது தெற்காசியாவில் 69,000 பேர் இடம்பெயர்வில் 97 சதவீதமாகும் என்று சர்வதேச உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் ITMC தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது.
பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரும் மைதேயி சமூகத்தினருக்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கவலரமாக வெடித்தது.
இருதரப்பினர் மோதல்களால் மாநிலமே போர்க் களம்போல் மாறியுள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் 50,000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ITMC மணிப்பூரில் கடந்த ஆண்டில் 67,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்று தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm