
செய்திகள் இந்தியா
கேரளம்: சிறுமிக்கு கை விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை
கோழிக்கோடு:
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் 4 வயது சிறுமிக்கு கைவிரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாய்சேய் நலப் பிரிவுக்கு கையில் உள்ள 6 ஆவது விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக 4 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்ததும் சிறுமியின் வாயில் பஞ்சு திணிக்கப்பட்டிருந்ததை அவரது பெற்றோர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவர்களிடம் சிறுமியின் பெற்றோர் கேள்வி எழுப்பினர். அப்போதுதான் விரலை அகற்றுவதற்குப் பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தவறுதலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் இதுதொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா உத்தரவிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 19, 2025, 6:54 pm
தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330
October 18, 2025, 7:29 pm
ORS எழுதப்பட்ட திரவத்துக்கு இந்தியாவில் தடை
October 18, 2025, 7:00 pm
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் தொழிலதிபர் கைது
October 18, 2025, 6:40 pm
டிரம்ப்புக்கு எதிராக மவுன சாமியார் ஆகிவிடுகிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் சாடல்
October 18, 2025, 5:33 pm
பெங்களூரில் 943 டன் உணவு வீண்: சித்தராமையா
October 18, 2025, 2:50 pm
ம.பி. குழந்தைகள் மருந்து பாட்டீலில் புழுக்கள்
October 18, 2025, 2:14 pm
குஜராத் மாநிலத்தில் புதிய அமைச்சரவை: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி அமைச்சர் ஆனார்
October 17, 2025, 4:14 pm
ரயிலில் கர்ப்பிணிக்கு வலி: வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர்
October 17, 2025, 3:45 pm