செய்திகள் இந்தியா
கேரளம்: சிறுமிக்கு கை விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை
கோழிக்கோடு:
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் 4 வயது சிறுமிக்கு கைவிரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாய்சேய் நலப் பிரிவுக்கு கையில் உள்ள 6 ஆவது விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக 4 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்ததும் சிறுமியின் வாயில் பஞ்சு திணிக்கப்பட்டிருந்ததை அவரது பெற்றோர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவர்களிடம் சிறுமியின் பெற்றோர் கேள்வி எழுப்பினர். அப்போதுதான் விரலை அகற்றுவதற்குப் பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தவறுதலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் இதுதொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா உத்தரவிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 5:54 pm
ரசகுல்லா சாப்பிட்ட 11 வயது சிறுவனை எரியும் அடுப்பில் வீசிய சமையல்காரர்
April 17, 2026, 1:03 pm
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு இந்திய அரசு விளம்பரம்
April 16, 2026, 8:43 pm
டெல்லி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்
April 16, 2026, 5:05 pm
கோவையில் துயரம்: 3-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
April 16, 2026, 4:42 pm
ஆக்ராவில் அரங்கேறிய கொடூர நாடகம்: தான் இறந்ததாகக் காட்ட பிச்சைக்காரரைக் கொன்ற முன்னாள் காவலர்
April 16, 2026, 4:23 pm
மும்பையில் பரபரப்பு: திருமண ஆசை காட்டி புது மாப்பிள்ளைகளை ஏமாற்றிய ‘மாயக் கன்னி’
April 14, 2026, 5:40 pm
மழைக்கால வெள்ளத்திற்கு முற்றுப்புள்ளி: நவீன 'பிரிகாஸ்ட்' தொழில்நுட்பத்தில் புதிய வடிகால் அமைப்பு
April 13, 2026, 2:52 pm
