
செய்திகள் இந்தியா
கேரளம்: சிறுமிக்கு கை விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை
கோழிக்கோடு:
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் 4 வயது சிறுமிக்கு கைவிரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாய்சேய் நலப் பிரிவுக்கு கையில் உள்ள 6 ஆவது விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக 4 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்ததும் சிறுமியின் வாயில் பஞ்சு திணிக்கப்பட்டிருந்ததை அவரது பெற்றோர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவர்களிடம் சிறுமியின் பெற்றோர் கேள்வி எழுப்பினர். அப்போதுதான் விரலை அகற்றுவதற்குப் பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தவறுதலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் இதுதொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா உத்தரவிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm