
செய்திகள் இந்தியா
கேரளம்: சிறுமிக்கு கை விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை
கோழிக்கோடு:
கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் 4 வயது சிறுமிக்கு கைவிரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாய்சேய் நலப் பிரிவுக்கு கையில் உள்ள 6 ஆவது விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக 4 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்ததும் சிறுமியின் வாயில் பஞ்சு திணிக்கப்பட்டிருந்ததை அவரது பெற்றோர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவர்களிடம் சிறுமியின் பெற்றோர் கேள்வி எழுப்பினர். அப்போதுதான் விரலை அகற்றுவதற்குப் பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
அறுவை சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தவறுதலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.
தகவல் அறிந்ததும் இதுதொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா உத்தரவிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 2:35 pm
யுனெஸ்கோ அனைத்துலக நினைவு பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் இடம்பிடித்துள்ளன
April 19, 2025, 12:27 pm
பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்ததால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு காவல் அதிகாரிக்கு பிரியாவிடை
April 17, 2025, 7:00 pm
வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை சரிந்தது
April 15, 2025, 5:29 pm
கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் தேவை: இந்தியாவிடம் இஸ்ரேல் கோரிக்கை
April 15, 2025, 11:35 am
ரயில் பயணத்தின் போது ஆடவரைக் குத்திய பெண்: இந்தியாவில் பரபரப்பு
April 13, 2025, 3:22 pm
இந்தியாவில் 30 நாட்களில் மூன்றாவது முறையாக யுபிஐ சேவை முடங்கியது
April 11, 2025, 6:11 pm