செய்திகள் இந்தியா
சச்சின் டெண்டுல்கர் உங்களைத் தொலைபேசியில் அழைத்து வாக்களிக்க சொன்னால் ஆச்சர்யம் வேண்டாம்: அவர் தேர்தல் ஆணையத்தின் தூதர்
புதுடெல்லி:
மக்களவைத் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு கட்ட தேர்தல்களில் 66.95 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும், மொத்தமுள்ள 95 கோடி வாக்காளர்களில் இதுவரை சுமார் 45.10 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட தகவல்: பிரபல கிரிக்கெட் வீரரும், தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதருமான சச்சின் டெண்டுல்கர் உங்களைத் தொலைபேசியில் அழைத்து, நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.
வாக்குப்பதிவை அதிகரிக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம், நடப்பு தேர்தல்களின்போது, வாக்காளர்களைக் கவரவும், அவர்களை ஊக்குவிக்கவும், பல்வேறு வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024-ல் இதுவரை சுமார் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளன. நடப்பு பொதுத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்களில் சுமார் 45.10 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2024, 1:08 pm
வெடிகுண்டு மிரட்டலால் துருக்கியில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது
September 5, 2024, 5:14 pm
மாநில அந்தஸ்தை மீட்போம்: ஜம்மு காஷ்மீரில் ராகுல் வாக்குறுதி
September 5, 2024, 5:01 pm
வினேஷ் போகட், பட்ரங் புனியா தேர்தலில் போட்டியிட தயாராகின்றனர்
September 4, 2024, 7:02 pm
பசுவை கடத்தியதாக பள்ளி மாணவன் சுட்டுக் கொலை
September 4, 2024, 6:47 pm
விமான தூதரக உடைமைகள் சோதிக்கப்படுகிறதா?: உச்சநீதிமன்றம் கேள்வி
September 3, 2024, 6:31 pm
உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
September 3, 2024, 6:16 pm
கொல்கத்தா மருத்துவர் கொலை: மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் நிதி முறைகேட்டில் கைது
September 3, 2024, 12:32 pm
பிரதமர் மோடி அரச முறை பயணமாகப் புருனை சென்றார்
September 2, 2024, 10:22 am