செய்திகள் இந்தியா
கோவேக்ஸின் செலுத்திக் கொண்ட 30%பேருக்கு பாதிப்பு
புது டெல்லி:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவேக்ஸினை செலுத்திக்கொண்ட 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்பிரிங்கர் நேச்சர் என்ற ஆய்விதழில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:
கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022ம் ஆண்டு முதல் 2023 ஆகஸ்ட் வரை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர்.
வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50 சதவீதம் பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு சுவாசக் குழாய் தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன
கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவர்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அரிதாக ரத்தம் உறைதல், ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைதல் ஆகிய பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்று மற்றொரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2024, 1:08 pm
வெடிகுண்டு மிரட்டலால் துருக்கியில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாகத் தரையிறங்கியது
September 5, 2024, 5:14 pm
மாநில அந்தஸ்தை மீட்போம்: ஜம்மு காஷ்மீரில் ராகுல் வாக்குறுதி
September 5, 2024, 5:01 pm
வினேஷ் போகட், பட்ரங் புனியா தேர்தலில் போட்டியிட தயாராகின்றனர்
September 4, 2024, 7:02 pm
பசுவை கடத்தியதாக பள்ளி மாணவன் சுட்டுக் கொலை
September 4, 2024, 6:47 pm
விமான தூதரக உடைமைகள் சோதிக்கப்படுகிறதா?: உச்சநீதிமன்றம் கேள்வி
September 3, 2024, 6:31 pm
உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
September 3, 2024, 6:16 pm
கொல்கத்தா மருத்துவர் கொலை: மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் நிதி முறைகேட்டில் கைது
September 3, 2024, 12:32 pm
பிரதமர் மோடி அரச முறை பயணமாகப் புருனை சென்றார்
September 2, 2024, 10:22 am