
செய்திகள் இந்தியா
எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல் காந்தி
புது டெல்லி:
அதானி போன்ற தொழிலதிபர்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்தும் எனது கேள்விகளுக்கு பிரதமர் மோடியால் ஒருபோதும் பதிலளிக்க முடியாது என்பதால் என்னுடன் பொது விவாதத்தில் பங்கேற்க அவர் மறுக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்தார்.
தில்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசுகையில், பிரதமர் மோடியுடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பொது விவாதம் நடத்த தயாராக உள்ளேன். ஆனால், அவர் வரமாட்டார்.
எனது முதல் கேள்வியே, தொழிலதிபர் அதானியுடன் அவருக்கான தொடர்பு குறித்ததுதான்.
அடுத்து, தேர்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். இந்த இரண்டு கேள்விகளுடன், அந்த விவாதம் நிறைவுற்றுவிடும்.
கொரோனா பாதிப்பு நேரத்தில் தட்டுகளைத் தட்டி ஒலி எழுப்பவும், கைப்பேசிகளில் ஒளிரச்செய்யவும் பொது மக்களவை பிரதமர் கேட்டுக்கொண்டது ஏன்? என்ற கேள்வியையும் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.
இந்த கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியாது என்பதால், என்னுடனான பொது விவாதத்தில் அவர் பங்கேற்கமாட்டார் என்றார் ராகுல்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm
காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை
July 2, 2025, 8:33 pm
ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு
July 2, 2025, 7:53 pm
இந்தியாவில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு
July 2, 2025, 4:56 pm
900 அடி வரை கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்: விமானிகள் இடைநீக்கம்
July 1, 2025, 10:18 pm