செய்திகள் இந்தியா
ஈரானில் இருந்து தப்பி மீன்பிடிபடகில் கேரளம் வந்த 6 தமிழர்கள் கைது
கொச்சி:
ஈரானில் இருந்து தப்பி கேரளத்தின் கோழிக்கோடு மாவட்ட கடற்பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மீன்பிடி படகை பறிமுதல் செய்த இந்திய கடலோரக் காவல்படையினர். அதில், இருந்த 6 தமிழக மீனவர்களை கைது செய்தனர்.
இதுதொடர்பாக இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவிக்கையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேபூரின் மேற்கு கடற்கரையில் ஈரான் கொடியேற்றிய வெளிநாட்டு மீன்பிடி படகை இந்திய கடலோரக் காவல்படையின் ரோந்து கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
கடலோரக் காவல்படை மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், மீன்பிடி படகு ஈரான் நாட்டைச் சேர்ந்தது என்று தெரியவந்தது.
அந்தப் படகு ஈரானியரான சையத் சவுத் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது என்றும், ஈரான் கடற்பகுதியில் மீன்பிடிக்க தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த 6 பேரும் கடந்த மார்ச் மாதத்தில் அன்சாரியுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகவும் கூறியபடி ஊதியம் வழங்காததால் அவர்கள் படகை எடுத்து கொண்டு இந்தியாவுக்கு தப்பி வந்தனர் என்று தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 10:29 pm
அனைவரின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்: இந்தியா கூட்டணி
May 19, 2024, 10:14 pm
எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல் காந்தி
May 18, 2024, 8:37 pm
ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: சோனியா
May 18, 2024, 8:19 pm
ஆம் ஆத்மி பெண் எம்பி தாக்கப்பட்டாரா?: பாஜகவின் சதி என குற்றச்சாட்டு
May 17, 2024, 7:22 pm
கோவேக்ஸின் செலுத்திக் கொண்ட 30%பேருக்கு பாதிப்பு
May 17, 2024, 4:48 pm
கேரளம்: சிறுமிக்கு கை விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை
May 16, 2024, 5:35 pm
இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு: மம்தா திடீர் முடிவு
May 16, 2024, 4:58 pm