செய்திகள் இந்தியா
வாக்காளர்களை மிரட்டும் வகையில் விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப் பதிவு
பெங்களூரு:
வாக்காளர்களை மிரட்டும் வகையில் சமூகவலைதளத்தில் விடியோ பதிவிட்டதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, கர்நாடக மாநிலத் தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் அளித்திருந்த புகாரில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா போன்றோரை பொம்மைகளைப்போல் சித்தரித்து விடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சமுதாயத்தினரைக் கூட்டில் இருக்கும் முட்டைகளைப் போல சித்தரித்துள்ளனர்.
முஸ்லிம்கள் என்ற பெரிய முட்டையை ராகுல் காந்தி இடுவது போல விடியோ அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதனடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின்பேரில் ஜெ.பி.நட்டா, அமித் மாளவியா, விஜயேந்திரா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 10:29 pm
அனைவரின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்: இந்தியா கூட்டணி
May 19, 2024, 10:14 pm
எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல் காந்தி
May 18, 2024, 8:37 pm
ராகுல் காந்தியை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: சோனியா
May 18, 2024, 8:19 pm
ஆம் ஆத்மி பெண் எம்பி தாக்கப்பட்டாரா?: பாஜகவின் சதி என குற்றச்சாட்டு
May 17, 2024, 7:22 pm
கோவேக்ஸின் செலுத்திக் கொண்ட 30%பேருக்கு பாதிப்பு
May 17, 2024, 4:48 pm
கேரளம்: சிறுமிக்கு கை விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை
May 16, 2024, 5:35 pm
இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு: மம்தா திடீர் முடிவு
May 16, 2024, 4:58 pm