நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்

பெங்களூரு:

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவ கேடாவின் பேரனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா 500க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது.

இதனால் தேர்தல் முடிந்த மறுநாள் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார்.

அவரது தந்தையும் எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணாவை கர்நாடக போலீஸாரின் சிறப்புப் படையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜெர்மனிக்கு சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக இரு முறை லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா திரும்பாத நிலையில், அவரை கைது செய்ய ப்ளூ கார்னர் நோட்டீஸ் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset