செய்திகள் இந்தியா
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
கோவை:
போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, பிரபல பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர்.
சமீப காலமாக சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் சவுக்குசங்கர்.
முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் கூறி வந்தார்.
சமீபத்தில் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்தும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்தனர்.
கடந்தாண்டு தமிழக அமைச்சர்கள் தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோ பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2024, 7:22 pm
கோவேக்ஸின் செலுத்திக் கொண்ட 30%பேருக்கு பாதிப்பு
May 17, 2024, 4:48 pm
கேரளம்: சிறுமிக்கு கை விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை
May 16, 2024, 5:35 pm
இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு: மம்தா திடீர் முடிவு
May 16, 2024, 4:58 pm
மணிப்பூரில் ஒரே ஆண்டில் 67,000 பேர் இடம்பெயர்ந்தனர்
May 15, 2024, 3:34 pm
மோடிக்கு ரூ.3 கோடி சொத்து
May 15, 2024, 3:26 pm
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இந்திய அதிகாரி பலி
May 15, 2024, 8:50 am
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுக்கு தடை: இந்திய அரசு அறிவிப்பு
May 14, 2024, 4:51 pm