செய்திகள் இந்தியா
வரிசையில் நிற்காமல் சென்ற எம்எல்ஏவை தட்டிக் கேட்ட வாக்காளருக்கு அடி
தெனாலி:
ஆந்திர மாநிலத்தில் வரிசையில் நிற்காமல் வாக்களிக்கச் சென்ற ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவை தட்டிக் கேட்ட நபரை, எம்எல்ஏவும் அவரின் ஆதரவாளர்களும் அடித்து உதைத்தனர். பதிலுக்கு அந்த வாக்காளரும் அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.சிவகுமார் வாக்களிக்கச் சென்றார். நீண்டவரிசையில் மக்கள் வாக்களிக்க காத்திருந்தபோது எம்எல்ஏ சிவகுமார் நேரடியாக வாக்குச் சாவடிக்கு சென்றார்.
அப்போது, வரிசையில் காத்திருந்த வாக்காளர் ஒருவர் அவரை தட்டிக் கேட்டார். இதனால், ஆந்திரமடைந்த எம்எல்ஏ, வாக்காளரின் கன்னத்தில் அறைந்தார்.
அவரும் எம்எல்ஏவை திருப்பி அறைந்தார். வாக்காளரை சூழ்ந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் அவரை அடித்து உதைத்து இழுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் விடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 10:20 pm
டெல்லியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம்: மஞ்சள் எச்சரிக்கை
April 25, 2026, 9:28 pm
மலேசியா, இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதித்தால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரும்
April 25, 2026, 4:21 pm
600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி
April 24, 2026, 11:34 am
இந்தியாவில் நீர் பருகும்படி பள்ளிகளில் ஒலிக்கும் மணி
April 22, 2026, 12:48 pm
கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
