
செய்திகள் இந்தியா
வரிசையில் நிற்காமல் சென்ற எம்எல்ஏவை தட்டிக் கேட்ட வாக்காளருக்கு அடி
தெனாலி:
ஆந்திர மாநிலத்தில் வரிசையில் நிற்காமல் வாக்களிக்கச் சென்ற ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவை தட்டிக் கேட்ட நபரை, எம்எல்ஏவும் அவரின் ஆதரவாளர்களும் அடித்து உதைத்தனர். பதிலுக்கு அந்த வாக்காளரும் அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.சிவகுமார் வாக்களிக்கச் சென்றார். நீண்டவரிசையில் மக்கள் வாக்களிக்க காத்திருந்தபோது எம்எல்ஏ சிவகுமார் நேரடியாக வாக்குச் சாவடிக்கு சென்றார்.
அப்போது, வரிசையில் காத்திருந்த வாக்காளர் ஒருவர் அவரை தட்டிக் கேட்டார். இதனால், ஆந்திரமடைந்த எம்எல்ஏ, வாக்காளரின் கன்னத்தில் அறைந்தார்.
அவரும் எம்எல்ஏவை திருப்பி அறைந்தார். வாக்காளரை சூழ்ந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் அவரை அடித்து உதைத்து இழுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் விடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm
காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை
July 2, 2025, 8:33 pm
ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு
July 2, 2025, 7:53 pm
இந்தியாவில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு
July 2, 2025, 4:56 pm
900 அடி வரை கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்: விமானிகள் இடைநீக்கம்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm