
செய்திகள் இந்தியா
வரிசையில் நிற்காமல் சென்ற எம்எல்ஏவை தட்டிக் கேட்ட வாக்காளருக்கு அடி
தெனாலி:
ஆந்திர மாநிலத்தில் வரிசையில் நிற்காமல் வாக்களிக்கச் சென்ற ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவை தட்டிக் கேட்ட நபரை, எம்எல்ஏவும் அவரின் ஆதரவாளர்களும் அடித்து உதைத்தனர். பதிலுக்கு அந்த வாக்காளரும் அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.சிவகுமார் வாக்களிக்கச் சென்றார். நீண்டவரிசையில் மக்கள் வாக்களிக்க காத்திருந்தபோது எம்எல்ஏ சிவகுமார் நேரடியாக வாக்குச் சாவடிக்கு சென்றார்.
அப்போது, வரிசையில் காத்திருந்த வாக்காளர் ஒருவர் அவரை தட்டிக் கேட்டார். இதனால், ஆந்திரமடைந்த எம்எல்ஏ, வாக்காளரின் கன்னத்தில் அறைந்தார்.
அவரும் எம்எல்ஏவை திருப்பி அறைந்தார். வாக்காளரை சூழ்ந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் அவரை அடித்து உதைத்து இழுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் விடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm
சென்னையில் ஓடுபாதையில் விமானத்தில் தீப்பொறி உருவானது: நூலிழையில் உயிர் தப்பிய 194 பயணிகள்
March 9, 2025, 9:55 pm
இஸ்ரேல் சுற்றுலா பயணி உட்பட 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: கர்நாடகாவில் பயங்கரம்
March 9, 2025, 2:30 pm
கர்நாடகா வரவுச் செலவு திட்டத்தில் சிறுபான்மையினருக்குப் பல சலுகைகள் அறிவிப்பு
March 7, 2025, 12:14 pm
மருந்தின் அளவு அதிகமாகியதால் சிக்கல்… என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்
March 7, 2025, 11:48 am
மேலும் 1 லட்சம் இந்தியர்களுக்கு ஆபத்து: அமெரிக்காவில் இருந்து தானாகவே வெளியேற நிர்ப்பந்தம்
March 4, 2025, 1:26 pm