செய்திகள் இந்தியா
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.
நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர்.
அப்போது அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.
ஊட்டிக்கு தினமும் 1,300 வேன்கள் உட்பட 20,000 வாகனங்கள் வருகை தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தனை வாகனங்கள் சென்றால் அங்கு நிலைமை மோசமாகும். உள்ளூர் மக்கள் நடமாட இயலாது. இதனால் சுற்றுச்சூழலும், வன விலங்குகளும் பாதிக்கப்படும்.
ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அங்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். உள்ளூர் மக்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 17, 2024, 7:22 pm
கோவேக்ஸின் செலுத்திக் கொண்ட 30%பேருக்கு பாதிப்பு
May 17, 2024, 4:48 pm
கேரளம்: சிறுமிக்கு கை விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை
May 16, 2024, 5:35 pm
இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு: மம்தா திடீர் முடிவு
May 16, 2024, 4:58 pm
மணிப்பூரில் ஒரே ஆண்டில் 67,000 பேர் இடம்பெயர்ந்தனர்
May 15, 2024, 3:34 pm
மோடிக்கு ரூ.3 கோடி சொத்து
May 15, 2024, 3:26 pm
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இந்திய அதிகாரி பலி
May 15, 2024, 8:50 am
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுக்கு தடை: இந்திய அரசு அறிவிப்பு
May 14, 2024, 4:51 pm