நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்

உலு சிலாங்கூர்:

கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

இம்மருத்துவ முகாம் இங்குள்ள மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று நம்பிக்கைக் கூட்டணியின் உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.

மக்களிடையே உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேன்டும் என பல நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம்.

எஸ்பி கேர் மருத்துவ குழுமம் இம் முகாமை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

அவ்வகையில் இந்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் வரும் மே 5ஆம் தேதி காலை 9 மணி முதல் 1 மணி வரை கோல குபு பாரு கிங் மிங் சீனப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலவச மருத்துவ சோதனை, பெகா பி40 சோதனை, கண், புற்றுநோய் சோதனைகள், ரத்த தான முகாம், மனநல பாதிப்பு சோதனைகள், இனிப்பு நீர் ஆகியவை இம்முகாமில் அடங்கும்.

முதலில் வரும் 300 பேருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். அதே வேளையில் அதிர்ஷ்ட குலுக்கலும் நடத்தப்படும்.

உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பயனாக இருக்கும் இம் மருத்துவ முகாமில் சுற்றுவட்டார மக்கள் திரளாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 

மேல்விவரங்களுக்கு spcaregroup எனும் சமூக வலைத் தளங்களை மக்கள் வலம் வரலாம் என்று டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset