நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிளாஸ்டிக் கழிவு நிறுவனத்தின் செயலாக்கம் மீது கடும் நடவடிக்கை: JAS 

சுங்கை பட்டானி: 

சுற்றுப்புறம் மாசுபடுத்தும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு புக்கிட் செலாம்பாவ் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் கழிவு செயலாக்க நிறுவனத்தின் செயல்பாட்டை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

1974 சூழல் தரநிலை சட்டத்தை மீறி செயல்படும் பிளாஸ்டிக் கழிவு செயலாக்கத்தை தடுக்க "ஒப் கெம்பூர்" நடவடிக்கையைச் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மேற்கொண்டதாக கெடா மாநில சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் (JAS), ஷரிபா ஜக்கியா சையத் சஹாப் தெரிவித்தார்.

"சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுத்தம் செய்து பிளாஸ்டிக் தட்டுகளை உற்பத்தி செய்வதற்காக பதப்படுத்துகின்றன ," என்றார் அவர்.

JAS கெடா அனுமதி இல்லாமல் செயல்படும் ஆறு பிளாஸ்டிக் திணறல் இயந்திரங்களும் காற்று மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள் மீதும் 1974 சூழல் தரநிலை சட்டம் 38(1)(a) பிரிவின் கீழ் செயல்பாடு நிறுத்த உத்தரவு (POK) விதித்துள்ளது.

மேலும், விசாரணையில் நிறுவனத்தில் பெரிய அளவிலான மூலப்பொருட்களும் தயாரிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

அதில், 1,000 ‘ஜம்போ பாக்ஸ்’ அல்லது சுமார் 500 மட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு மூலப்பொருட்களாக கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், 110 மட்ரிக் டன் பிளாஸ்டிக் தட்டுகளும் 4,400 பைகளில் வைக்கப்பட்டதுடன் ஒவ்வொரு பையும் சுமார் 25 கிலோகிராம் எடையுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளும் தட்டுகள் தயாரிப்புகளின் மாதிரிகளை எடுக்கப்பட்டு மலேசிய வேதியியல் துறைக்கு பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் பிரிவு 34A (6) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ஷரிபா ஜக்கியா கூறினார். இந்த சட்டம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கை ஒப்புதல் இல்லாமல் திடக்கழிவு மறுசுழற்சி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

மேலும், இந்த வழக்கு பிரிவு 34A(6), சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 (சட்டம் 127) இன் கீழ் ஒரு குற்றமாகவும் விசாரிக்கப்படுகிறது. மேலும் அதே சட்டத்தின் பிரிவு 34(8) இன் கீழ் தண்டனைக்குரியது, இது குறைந்தபட்சம் RM 100,000 க்குக் குறையாத அபராதமும் அதிகபட்சமாக RM 1 மில்லியனுக்கு மிகாமலும் அபராதமும் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் கட்டாய சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

"சுற்றுச்சூழல் சட்டங்களுடன் தொழில்துறை இணங்குவதை உறுதி செய்வதற்கும், பொது சுகாதாரம், சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்கும் அவ்வப்போது அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என்று கெடா JAS வலியுறுத்துகிறது," என்றார் அவர்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எந்தவொரு செயல்பாடுகளையும் 1-800-88-2727 அலல்து  http://eaduan.doe.gov.my என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளிக்கவும், ஒத்துழைக்கவும் கெடா JAS பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset