நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொய்யான குற்றச்சாட்டுகளால் ஓர் இனத்தையே திசை திருப்புகின்றனர்: டாக்டர் சத்தியபிரகாஷ்

உலுசிலாங்கூர்:

பொய்யான குற்றச்சாட்டுகளால் ஒரு சிலர் ஓர் இனத்தையே திசை திருப்பி வருகின்றனர்.

உலுசிலாங்கூர் நம்பிக்கை கூட்டணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் இதனை கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரையும் பற்றி தினசரி குற்றச்சாட்டுகள் சுமத்துகின்றனர்.

இது குறித்து என்ன செய்தி கொடுத்தாலும் அதை திசை திருப்புகின்றனர்.

குறிப்பாக கொச்சைவார்த்தைகளில் மிகவும் மோசமாக திட்டுகின்றனர்.

இதை பார்க்கும் போதும் நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக செயல்படுகின்றனர் என்பது தான் என்னுடைய கேள்வியாகும்.

எது எப்படி இருந்தாலும் இந்திய சமுதாயத்திற்கு தேவையானதை பிரதமர் நிச்சயம் பூர்த்தி செய்வார்.

அதற்கான குரலை கெஅடிலானில் உள்ள இந்திய தலைவர்களான நாங்கள் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

பதவிக்காக குரல் கொடுப்பதை நிறுத்தும் தலைவர்கள் நாங்கள் இல்லை என்று டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset