நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு

பாசிர் மாஸ்:

வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த பரபரப்பு சம்பவம் அதிகாலை 3 மணியளவில் கிளந்தான் பாசிர் மாஸில் நிகழ்ந்தது.

அதிகாலையில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலால் அவ்வீட்டில் தூங்கியிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்த போனார்கள்.

இந்த சம்பத்தில் வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அதே வேளையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் துப்பாக்கி தோட்டங்கள் பாய்ந்ததால் சேதமடைந்ததன.

இந்த சம்பவத்தை பாசிர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைவர் காமா அஸ்ருல் முகமத் உறுதிப்படுத்தினார்.

அதே வேளையில் இது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset