நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்

கோல குபு பாரு:

அரசியல் தலைவர்களை நம்பாவிட்டாலும் பரவாயில்லை, பொது மக்கள் பொது இயக்கத்தினரை நம்ப வேண்டும் என்று  ஓம்ஸ்.பா.தியாகராஜன் கேட்டுக் கொண்டார்.

நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து பல அரசாங்கத்தின் ஆட்சியின் நாடு செயல்பட்டதை நாம் பார்த்துள்ளோம்.

ஒற்றுமை அரசாங்கத்திலும் தேசியக் கூட்டணியில் பலர் வந்து செல்கின்றனர். 

இருப்பினும், யார் நமக்காக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

ஒற்றுமை அரசு இந்தியர்களுக்காகச் செயல்படுகின்றது என்பதை நம்பி பொதுமக்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்.  

மேலும், வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள் என்றார் அவர்.
 
தேர்தலுக்காக வாக்குறுதிகள் வழங்க தாம் அரசியல்வாதியல்ல என்றும் தானும் ஒரு குடிமகன் என்ற உரிமையில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்றும் அவர் கூறினார்.  

கடந்த காலக் கசப்பான அனுபவங்களைக் கொண்டு இப்போது சிக்கல்களுக்கான தீர்வை ஒற்றுமை அரசாங்கத்தால் மட்டுமே வழங்க முடியும் என்றார். 

இங்கே இருக்கும் 17 பொது இயக்கங்களும் பல காலங்களாக இங்கு இயங்கி வருகின்றன. அவர்களை நம்புங்கள். உங்களின் தேவைகளை அறிந்தவர்கள் இவர்கள் என ஓம்ஸ்.பா.தியாகராஜன் வலியுறுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset