நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்

உலு சிலாங்கூர்:

கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் மறுத்துள்ளார்.

கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு ராசாவில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

அந்த மேடையில் நான் பேசியது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களில் 99 சதவீதம் பேர் நம்புக்கை கூட்டணி ஆதரவாளர்கள்.

ஜசெக, கெஅடிலான் தலைவர்களும் அங்கு இருந்தனர்.

அவர்கள் முன்னிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரை நான் விமர்சித்தேன் என்றால் அதை யாராவது நம்புவார்களா?

மஇகாவும், மசீசவுக்கு, அமைச்சரவையில் இடம் கொடுக்காததற்காக அதிக கோபம் கொள்ள வேண்டும் என்ற எனது கூற்று நகைச்சுவையாக இருந்தது.

பிரதமர் மஇகாவை ஒதுக்கி விட்டதாக விமர்சித்ததாக வெளிவந்த செய்திக்கு விளக்கமளிக்கும் வகையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சரவணன் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset