செய்திகள் மலேசியா
தீயணைப்புப்படை உட்பட அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு; சேவைக்கு வழங்கப்படும் அங்கீகாரம்: பிரதமர்
ஈப்போ:
தீயணைப்புப்படை உட்பட அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, அவர்களின் சேவைக்கு வழங்கப்படும் அங்கீகாரமாகும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 13 சதவீதத்திற்கும் மேலாக உயர்ததப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த முடிவு தீயணைப்புப் படை உள்ளிட்ட அரசு ஊழியர்களின் சேவை, பங்களிப்பை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
குறிப்பாக நாடு பேரிடர் உள்ளிட்ட தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது அவர்களின் சேவை அளப்பறியதாக உள்ளது.
நாடு நிச்சயமற்ற பொருளாதார சூழலை எதிர்கொண்டாலும்,
நாட்டின் அமைதியை உறுதி செய்வதில் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் முன் வரிசையாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈப்போ தம்பூனில் நடந்த உலக தீயணைப்புப் படை தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm
எல்.பி.டி 2 நெடுஞ்சாலையில் நடந்த சாலை கோர விபத்தில் ஒருவர் மரணம்; மூவர் படுகாயம்
May 18, 2024, 12:58 pm
மலேசியாவில் ஜமாஹா இஸ்லாமிய இயக்கத்தின் செயல்பாடு கட்டுப்பாட்டில் உள்ளது: சைபுடின்
May 18, 2024, 12:56 pm
மலேசியாவில் ஜெ.ஐ இயக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது: உள்துறை அமைச்சு
May 18, 2024, 11:39 am