நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மும்மொழி அகராதி மாணவர்களுக்கு பெரும் பலனைத் தரும்: மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி

கோல குபு பாரு:

கோல குபு பாரு இந்தியர்கள் வாக்களிக்கும் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஜெயக்தி குழுமத்தின் தலைவர் டத்தோ கு. செல்வராஜ் தெரிவித்தார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்திய சமுதாயம் எது நல்லது என்று சிந்தித்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

குறிப்பாக வாக்களிப்பது நமது கடமை. இதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சமுதாயத்தின் நலன் என்ற அடிப்படையில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புதிய வெளியீடான மும்மொழி அகராதி புத்தகத்தை அதன் உரிமையாளர் டத்தோ  செல்வராஜ் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரியிடம் வழங்கினார்.

இந்த மும்மொழி அகராதி புத்தகத்தை பெற்றுக் கொண்ட சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி  மூன்று மொழிகளில் புத்தகம் அச்சடிக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

இது மாணவர்களுக்கு பெரும் பலனைத்  தரும் என்று அவர் வாழ்த்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset