செய்திகள் மலேசியா
உலு சிலாங்கூரில் 324 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம்: மந்திரி புசார் வழங்கினார்
பத்தாங்காலி -
உலு சிலாங்கூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 324 மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் இலவச பேருந்து கட்டணமாக வழங்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு ஆகியோர் மாணவர்களுக்கு இந்த பற்று சீட்டுகளை எடுத்து வழங்கினர்.
பத்தாங்காலி சமூக மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு நேரடியாக இந்த பற்று சீட்டுகள் வழங்கப்பட்டது.
பத்தாங்காலி தமிழ்ப்பள்ளியைப் சேர்ந்த 32 மாணவர்கள், சங்காட் ஆசா தமிழ்ப் பள்ளியை சேர்ந்த 27 மாணவர்கள், எஸ்கோட் தமிழ்ப் பள்ளியை சேர்ந்த 28 மாணவர்கள், கோல குபு பாரு தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள், கெர்லிங் தமிழ்ப் பள்ளியைப் சேர்ந்த 60 மாணவர்கள், களும்பாங் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 62 மாணவர்கள், லீமா பெலாஸ் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள், சுங்கை சோ தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள், புக்கிட் பெருந்தோங் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள் என அனைவருக்கும் தலா 300 வெள்ளி பற்றுச் சீட்டுகளை பெற்றுக் கொண்டனர்.
ஆக மொத்தம் 324 மாணவர்களுக்கு 97 ஆயிரத்து 200 வெள்ளி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm