நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்கிறேன்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவி நேற்று ஐஜேஎன்-இல் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் விரைவில் குணமடைந்து இல்லம் திரும்ப தாம் பிராத்தனை செய்வதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஐந்தாவது பிரதமராக இருந்த 85 வயதான அப்துல்லா படாவி நேற்று மாலை 3 மணியளவில் ஐஜேஎன்-இல் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு ஸ்மால் ஸ்பான்டேனியஸ் நியூமோதோராக்ஸ் நோய் இருப்பதாகவும் தற்போது சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில்  ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனது மாமன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் உறுதிப்படுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset