செய்திகள் மலேசியா
இந்திய சமுதாயம் பொறாமைப்படவில்லை, வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறது: டத்தோஸ்ரீ எட்மண்ட்
கோலாலம்பூர்:
பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இந்திய சமுதாயம் பொறாமைப்படவில்லை.
மாறாக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அந்த சமுதாயத்தின் கோரிக்கை என்று கெஅடிலான் முன்னாள் உறுப்பினரும் துணையமைச்சருமான டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா கூறினார்.
அண்மையில் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பிரதமர் இந்திய சமூகம் பூமிபுத்ராக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து பொறாமைப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.
உண்மையில் இந்திய சமூகம் பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து பொறாமைப்பட்டதில்லை.
காரணம் அவர்களுக்கான உதவிகள் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அது அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகை ஆகும்.
ஆகையால், இது பற்றி இந்திய சமுதாயத்திற்கு எந்த பொறாமையும் வருத்தமும் இல்லை.
ஆனால், இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்க நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக சிறுபான்மை மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் ஓரங்கட்டப்படக் கூடாது.
இதுதான் இந்திய சமுதாயத்தின் கோரிக்கையாகவும் போராட்டமாகவும் உள்ளது.
இதை அரசாங்கம் பொறாமையாக கருதக்கூடாது என்று டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm
அந்நிய நாட்டினருக்கு காரை வாடகைக்கு விடும் உரிமையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜேபிஜே
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm