நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயம் பொறாமைப்படவில்லை, வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறது: டத்தோஸ்ரீ எட்மண்ட்

கோலாலம்பூர்:

பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இந்திய சமுதாயம் பொறாமைப்படவில்லை.

மாறாக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அந்த சமுதாயத்தின் கோரிக்கை என்று கெஅடிலான் முன்னாள் உறுப்பினரும் துணையமைச்சருமான டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா கூறினார்.

அண்மையில் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பிரதமர் இந்திய சமூகம் பூமிபுத்ராக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து பொறாமைப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

உண்மையில் இந்திய சமூகம் பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து பொறாமைப்பட்டதில்லை.

காரணம் அவர்களுக்கான உதவிகள் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அது அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகை ஆகும்.

ஆகையால், இது பற்றி இந்திய சமுதாயத்திற்கு எந்த பொறாமையும் வருத்தமும் இல்லை.

ஆனால், இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்க நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக சிறுபான்மை மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் ஓரங்கட்டப்படக் கூடாது.

இதுதான் இந்திய சமுதாயத்தின் கோரிக்கையாகவும் போராட்டமாகவும் உள்ளது.

இதை அரசாங்கம் பொறாமையாக கருதக்கூடாது என்று டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset