செய்திகள் மலேசியா
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த LEFTENAN T. சிவசுதன் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது
மஞ்சோங்:
லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த LEFTENAN T. சிவசுதனின் நல்லுடல் இன்று மஞ்சோங் இந்து சபா சனாதன தர்ம ஆசிரமத்தில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
தாமான் செர்டாங் ஜெயாவில் நிகழ்ந்த இறுதியஞ்சலிக்குப் பிறகு சிவசுதனின் நல்லுடல் காலை 11.30 மணிக்கு இந்து மயான தகன மையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பிறகு மதியம் 12.15 மணியளவில் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அன்னாரின் நல்லுடலுக்கு அரச மலேசிய கடற்படையைச் சேர்ந்த 14 அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் அவரின் இல்லத்தில் ராணுவ மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் சிவசுதனுடன் சேர்த்து 9 பேர் உயிரிழந்தனர். LEFTENAN சிவசுதன் SKUADRON 502 யூனிட்டின் விமானியாக பணியாற்றி வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் தான் சிவசுதனுக்கு டாக்டர் ஹர்சினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm