நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த LEFTENAN T. சிவசுதன் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது

மஞ்சோங்: 

லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த LEFTENAN T. சிவசுதனின் நல்லுடல் இன்று மஞ்சோங் இந்து  சபா சனாதன தர்ம ஆசிரமத்தில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது 

தாமான் செர்டாங் ஜெயாவில் நிகழ்ந்த இறுதியஞ்சலிக்குப் பிறகு சிவசுதனின் நல்லுடல் காலை 11.30 மணிக்கு இந்து மயான தகன  மையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. பிறகு மதியம் 12.15 மணியளவில் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் அன்னாரின் நல்லுடலுக்கு அரச மலேசிய கடற்படையைச் சேர்ந்த 14 அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் அவரின் இல்லத்தில் ராணுவ மரியாதை செலுத்தினர்.

முன்னதாக,  லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் சிவசுதனுடன் சேர்த்து 9 பேர் உயிரிழந்தனர். LEFTENAN சிவசுதன் SKUADRON 502 யூனிட்டின் விமானியாக பணியாற்றி வந்தார். 

கடந்த ஜனவரி மாதம் தான் சிவசுதனுக்கு டாக்டர் ஹர்சினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset