செய்திகள் மலேசியா
மின்னல் தாக்கி இந்தோனேசியத் தொழிலாளர் மரணம்
பெட்டாலிங் ஜெயா:
மாறன் ஃபெல்டா ஜெங்கா 19-இல் இந்தோனேசிய தொழிலாளர் மின்னல் தாக்கி இறந்தார்.
லோம்போக்கைச் சேர்ந்த 40 வயதான கமாருடின் நேற்று மதியம் 1.30 மணியளவில் மழை பெய்த போது ரம்பாய் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அம்மரத்தின் கீழ் அத்தொழிலாளர் மயங்கிக் கிடப்பதைக் கண்ட பாதிக்கப்பட்டவரின் நண்பரிடமிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று மாறன் காவல்துறைத் தலைவர் முகமது ஜம்ரி முகமது ஜாபர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் உடலை வெளிப்புற பரிசோதனையில் காயங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால் மின்னல் தாக்கியதாக நம்பப்படும் ரம்பாய் மரங்களில் எரிந்த அடையாளங்கள் காணப்பட்டன.
பாதிக்கப்பட்டவரின் நண்பரான நூருல் அஹ்வான் என்பவரையும் போலீசார் விசாரித்தனர்.
அத்தொழிலாளர் மழையின் காரணமாக மரத்தின் கீழ் ஓய்வெடுத்திருந்தார் என்று அவருடைய நண்பர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்காக ஜெங்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm