நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்னல் தாக்கி இந்தோனேசியத் தொழிலாளர் மரணம்

பெட்டாலிங் ஜெயா: 

மாறன் ஃபெல்டா ஜெங்கா 19-இல் இந்தோனேசிய தொழிலாளர் மின்னல் தாக்கி இறந்தார்.

லோம்போக்கைச் சேர்ந்த 40 வயதான கமாருடின் நேற்று மதியம் 1.30 மணியளவில் மழை பெய்த போது ரம்பாய் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். 

அம்மரத்தின் கீழ் அத்தொழிலாளர் மயங்கிக் கிடப்பதைக் கண்ட பாதிக்கப்பட்டவரின் நண்பரிடமிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று மாறன் காவல்துறைத் தலைவர் முகமது ஜம்ரி முகமது ஜாபர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடலை வெளிப்புற பரிசோதனையில் காயங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் மின்னல் தாக்கியதாக நம்பப்படும் ரம்பாய் மரங்களில் எரிந்த அடையாளங்கள் காணப்பட்டன.

பாதிக்கப்பட்டவரின் நண்பரான நூருல் அஹ்வான் என்பவரையும் போலீசார் விசாரித்தனர்.

அத்தொழிலாளர் மழையின் காரணமாக மரத்தின் கீழ் ஓய்வெடுத்திருந்தார் என்று அவருடைய நண்பர் கூறினார். 

பாதிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்காக ஜெங்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset