நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாங் சோக் தாவ் கீ ஹியோங்கின் பணியை நிச்சயம் தொடர்வார்: லிம் குவான் எங்

ஹுலு சிலாங்கூர்:

கோல குபு பாரு மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் பாங் சோக் தாவ் போட்டியிடவுள்ளார். 

மக்கள் நிலையான வளர்ச்சியை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கும் மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும் பாங் சோக் தாவ் சரியான வேட்பாளர் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் தெரிவித்தார். 

மறைந்த லி கீ ஹியோங்கின் சிறந்த சேவையைத் தொடரக் கூடிய சிறந்த வேட்பாளராக பாங் சோக் தாவ் திகழ்கின்றார். 

முன்னதாக, பாங் வீடமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சரான ங்கா கோர் மிங்கின் செய்திச் செயலாளரார் ஆவார்.

மேலும், கோல குபு பாரு தொகுதியை எதிர்க்கட்சி கைப்பற்றினால் அப்பகுதி மக்களின் வளர்ச்சி நின்று விடும் என்றார் லிம் குவான்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset