நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிவாசலுக்கு அருகே நிகழ்ந்த சர்ச்சைகள் தொடர்பில் போலீசாருக்கு புகார் கிடைத்தது

ஜார்ஜ்டவுன்:

சுங்கை நிபோங் பெசார் பள்ளிவாசலுக்கு அருகே நிகழ்ந்த சர்ச்சைகள் தொடர்பில்
போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது.

இதனை வட கிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் ரஸ்லாம் அப்துல் ஹமித் இதனை உறுதிப்படுத்தினார்.

ஹெலிகாப்டர் விமான விபத்தில் மரணமடைந்த முகமத் ஃபிர்டாவுசின் இறுதி சடங்கு அப்பள்ளிவாசலுக்கு அருகே நிகழ்ந்தது.

அந்நேரத்தில் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும் காரோட்டுநருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது பெரிய சர்ச்சையாக மாறியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசுக்கு புகார் கிடைத்துள்ளது. இது தொடர்பில் போலீசார் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset