செய்திகள் மலேசியா
MYJalan செயலியின் மூலம் சேதமடைந்த சாலைகள் குறித்து மொத்தம் 14,031 புகார்கள் பெறப்பட்டுள்ளன: ஹம்மத் மஸ்லான்
கோலாலம்பூர்:
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இவ்வாண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் MYJalan செயலியின் மூலம் சேதமடைந்த சாலைகள் குறித்து மொத்தம் 14,031 புகார்களைப் பொதுப் பணித்துறை அமைச்சகம் பெற்றுள்ளது.
அந்த எண்ணிக்கையில், 27 விழுக்காடு அல்லது 3,776 புகார்கள் பொதுப்பணித் துறையின் மேற்பார்வையில் சம்பந்தப்பட்டதாகவும், 73 விழுக்காடு அல்லது 10,255 புகார்கள் மற்ற அமைச்சகங்களின் பொறுப்பில் இருப்பதாகவும் அதன் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அஹம்மத் மஸ்லான் கூறினார்.
இருப்பினும், கூட்டரசு சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளைப் பராமறிப்பதற்கு தங்கள் தரப்பு பொறுப்பேற்கும் என்றார்.
சம்பந்தப்பட்ட தகவல்களை விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்களுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.
இதுவரை தனது அமைச்சகம் சாலை தொடர்பான விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட 3,766 புகார்களில் 86 விழுக்காட்டைத் தனது தரப்பு தீர்த்துவிட்டதாகவும், மீதமுள்ளவை இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் அஹம்மத் கூறினார்.
நெடுஞ்சாலை மற்றும் கூட்டரசு சாலைகளில் குழிகள் இருந்தால், அதை 24 மணி நேரத்திற்குள் சரிசெய்ய வேண்டும்.
இதுவரை, தனது தரப்பு 100 சதவீதத்தை 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கும் குறைவாக நேரத்தில் சரி செய்துள்ளது என்று அவர் கூறினார்.
MYJalan செயலி என்பது சாலைப் பயனர்கள் சாலை சேதம் தொடர்பான புகார்களை எளிதாகச் செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm