நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

திருச்சி:

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை, வியட்நாம், கட்டார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், நேற்றிரவு திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லத் தயாராக இருந்த ஏர் ஏசியா விமானத்தில், நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.

அப்போது, பயணி ஒருவரது பையில் 6 ஆயிரம் அமெரிக்க டாலர்,  1,100 மலேசிய ரிங்கிட், 5 லட்சத்து 50 ஆயிரம் இந்திய ரூபாயையும் மறைத்து வைத்து கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அவரிடமிருந்த வெளிநாட்டு பணக்கட்டுகளை  பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset