செய்திகள் மலேசியா
மலேசியாவுக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை, வியட்நாம், கட்டார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நேற்றிரவு திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லத் தயாராக இருந்த ஏர் ஏசியா விமானத்தில், நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்துள்ளனர்.
அப்போது, பயணி ஒருவரது பையில் 6 ஆயிரம் அமெரிக்க டாலர், 1,100 மலேசிய ரிங்கிட், 5 லட்சத்து 50 ஆயிரம் இந்திய ரூபாயையும் மறைத்து வைத்து கடத்திச் செல்ல இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, அவரிடமிருந்த வெளிநாட்டு பணக்கட்டுகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm